Header Ads



றிசாத் பதியுதீனே, இதனையும் கவனத்திற் கொள்ளுங்கள்...!

வடக்கு முஸ்லீமகள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு    இருபத்தேழு ஆண்டுகள் எம்மைவிட்டு சென்றுள்ளது.

எமது தாயக மண்ணில் அடிப்படை உரிமைகள் கருவறுக்கப்பட்டு வாழ்க்கை அழிக்ப்பட்டு நிர்க்கதியற்று  முடக்கப்பட்ட இச்சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் எம்மவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சவால்களையும்  நிவர்த்திகவென இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லீம்கள் உள்வாங்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.இதனை புத்தளம் வாழ் வெளியேற்றப்பட்ட யாழ்,கிளிநொச்சி சிவில் ஒன்றியம் வரவேற்கின்றது. இவ்வாராக முஸ்லீம்களின் பிரச்சினையை நிவர்த்திக்கும் போது கீழ்வரும்  விடயங்களை  கவனம்செலுத்துவீர்கள் என முன்வைக்கின்றோம்  

1) வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான விஷேடஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கவேண்டியதுடன் அவசியத்தையமும் உண்மைத்தன்மையை சர்வதேசத்திற்கு உணர்த்தி தாய்திருநாட்டின் கௌரவத்தையும் உண்மைநிலையை உறுதிப்படுத்தல்    .

2) திட்டமான மீளகுடியேற்றக்கொள்கை உருவாக்கப்பட்டு .மதீப்பீடுகள் .கணக்கெட்ப்புக்கள்.நஷட ஈடுகள் கணக்ககெடுக்ப்படவேண்டியதுடன் ஒரு பொறிமுறையின் அடிப்படையில் மீள்குடியற்றம் கட்டம்கட்டமாக முன்னெடுக்கப்படல் யாழ்ப்பாணம்.கிளிநொச்சி மாவட்டமக்கள் 95% மீள்குடியேற்றம் கூட இதுவரையில் நடைபெறவில்லை. 

3) மீள்குடியேற்றம் செய்யப்படாமல் எல்லை நிர்ணயம்செய்யப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் பாதகநிலையும் சனத்தொகைக்கு ஏற்ப பிரிக்கப்படாமை,நிலப்பரபிற்கு ஏற்ப  பிரிபடாமை, முறையற்ற இணைப்பு என்பவற்றில் கவனம் செலுத்தல் 

4) தேர்தல் முறைமாற்றம், அதிகாரப்பகிர்வு, ஆட்சிமுறைமாற்றம் போன்றவற்றில் சிறுபான்மைச்சமூகமான முஸ்லீம்களுக்கு ஏற்படும் பாதகமான நிலையும்  இது சீராக்கப்பட வேண்டிய அவசியமும் உத்தரவாதங்கள் வழங்கப்படவேண்டிய நிலையையும் .                

5) பூர்வீகாணி சுவீகரிப்பும் வர்த்தமானி அறிவிப்பும்,எம்மவர்களின் காணிகளை பிறருக்கு வழங்கப்படிருக்கும் நிலையும்,வழக்கில் காலதாமதம் பணம்வீண்விரயமாதல், இருபத்தாறு ருடமாக எம்மவருக்கு அரசகாணி வழங்கப்படாமை, எம்வர்களின் காடகியுள்ளகாணியை துப்பரவு செய்யும்போது அபாண்டமாக குற்றச்சாட்டுக்கள்  தீர்த்துவைத்தல 6)அரச அதிகாரிகள் இனவாத நடவடிக்கையும் .புறக்கணிப்பும் உரியவாறு இல்லாது செய்து உரிய பயனைப் பெறவழிப்படுத்தல்.   

7) வடமாகாண சபை முஸ்லீம்களின் விடயத்தில்  பாரபட்சமும் அக்கறையின்மையும்  புறக்கணிப்பும்செய்து வரும்நிலையை ஆளுனரின் அதிகாரங்கள் மூலம் தீர்வைப்பெற வழிசெய்துகொடுத்தல்                    

8) தழிழ் அரசியல்வாதிகள் கடும்போக்கு இனவாத செயற்பாடுகளும் முட்டுக்கட்டைகளும்.      கலந்துரையாடி உண்மைநிலையை உணர்த்துதல்              

9) அரச காணிகளை எம்மவர்களுக்கு  வழங்களில் இழுத்தடிப்பும் புறக்கணிப்பும்.  நிலையைபோககி  அரசகாணி பெற்று மீள்குடியை  துரிதப்படுத்தல்             10) அடிப்படை வாழ்வாதார உதவிகளை வழங்கி மீள்குடியேற்ற இடர்பாடுகளை நிவர்த்தி செய்தல்  11) எம்மவர்களுக்கான இழந்த அனைத்து விடயஙகளயும் உரியவாராக நஷ்ட ஈட்டைப்பெற்றுக்கொடுத்தல்      எனவே மேற்குறிப்பிட்ட விடயங்களில் கவனம் செலுத்தி தங்களின் வழிகாட்டலில் விரைவாக வெளியேற்றப்பட்ட எம்மவர்களின் பூர்வீக இருப்பிடத்தில் தன்மானத்துடன் உரிமையுடன் வாழ வழிசெய்யுமாறு அன்பாக வேணடுகிறோம். 

தலைவர் 
அப்துல் மலிக் மௌலவி 
செயலாளர் 
ஹஸன் பைறூஸ் 

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் ஒன்றியம்.

No comments

Powered by Blogger.