முஸ்லிம்களுக்கு நாம் அநீதி இழைக்கப்போவதில்லை - மாவை
தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையில் உள்ளக சுயநிர்ணயத்துடனான அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டு நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும். இதன்போது முஸ்லிம்களும் தமிழர்களுடன் சகோதரர்களாக வாழும் வகையிலான அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியவாறான சுயாட்சி அலகொன்றை வழங்குவதற்கும் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
அரசியலமைப்பு சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாம் இணைந்த வட கிழக்கில் அதிகாரங்கள் பகிரப்பட்ட சமஷ்டி முறைமையை கோருகின்றபோது தற்போது முஸ்லிம் சகோதரர்கள் சிலர் அதனை எதிர்க்கின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
கடந்த காலத்தில் பெருந்தலைவர் அஷ்ரபுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் படி வடகிழக்கின் பூர்வீக சகோதர இனத்தவர்களான தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தே அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதெனவும் விசேடமாக வடக்கு கிழக்கு இணைகின்றபோது முஸ்லிம்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான சுயாட்சி அலகொன்றை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அது குறித்து நாம் தற்போதைய தலைமைகளுடனும் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
கிழக்கு மாகாண சபையில் நாம் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்துள்ளோம். முஸ்லிம் பிரதிநிதியை முதலமைச்சராக நியமிக்க அங்கீகாரமளித்துள்ளோம். ஆகவே முஸ்லிம் சகோதரர்களுக்கு நாம் அநீதி இழைக்கப்போவதில்லை. இணைந்த வடக்கிழக்கில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பகிர்கின்றபோது முஸ்லிம்களின் விடயத்தினையும் நாம் கருத்தில் கொள்வோம். ஆகவே அதற்கான கலந்துரையாடல்களை இதய சுத்தியுடன் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுகின்றோம் என்றார்.
மாவை சேனாதிராசா வை முஸ்லிம்கள் நம்பலாம் நல்ல மனிதர் ஆனால் மற்றவர்கள்....
ReplyDeleteஉங்களையும் சம்பந்தன் ஐயாவையும் நம்பலாம், உங்களோடு இருக்கும் மதவெறியன் யோகேஸ்வரனயயும் கிருஸ்துவ அடிப்படைவாதி சார்ள்ஸ் நிர்மலநாதனையும் எப்படி நம்புவது? என்னை பொறுத்தவரை ஈழ தமிழர்களும் நியமனவர்களும், நல்லவர்களும் அரிது
ReplyDeleteWhat ever your Tamils did wasn't correct since decades. why can't you point out
ReplyDeleteஐயா!
ReplyDeleteதனியலகு, கூட்டலகு, இணைந்தலகு எதுவுமே எமக்கு வேண்டாம். தனித்தனியே இருப்போம். இரண்டு முதலமைச்சர்கள் இருப்பது பலம் தானே. விக்கி ஐயா போல உங்களுக்கு எதிராக பல்டியடித்தாலும் மற்றையவரைக்கொண்டு சமாளிக்கலாம். கிழக்கிலும் பிள்ளையான் போல ஒரு தமிழ் முதலமைச்சரை கொண்டுவர வியூகம் அமையுங்கள். அதைவிட்டுவிட்டு என்னவழிப்பட்டும் முஸ்லிம்களை எமது ஆளுகையின் கீழ் வைத்திருக்கவேண்டும் என்ற உங்களது நரிச்சிந்தனையை கைவிடுங்கள். உங்களது உள்நோக்கம் அறிக்கைகளில் தவறியேனும் வெளிவந்துவிடுகிறது.
ஐயா மாவை சேனாதிராஜா அவர்களே,
ReplyDeleteநல்ல சிறப்பான உரை மற்றும் சிந்தனை, அனால் வடக்கும் கிழக்கும் இணைந்து இருந்த பொழுது நீங்கள் இவ்வாறு எந்த சந்தர்ப்பத்திலும் பேச வில்லையே ஐயா?????
எமது அனுமதி இல்லாது வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட பொழுது செய்வதறியாது எமது சமூகமும் எமது தலைமைகளும் சிந்தித்த பொழுது, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வாய்ய்பு இல்லை என்பதை உணர்ந்த சந்தர்ப்பத்தில் எம் தலைவர் அஷ்ரப் அவர்களால் முன் வைக்கப்பட்ட யோசனைதான் அது (நடைமுறை சாத்தியம் இல்லை என்று தெரிந்திருந்தும்). அந்த யோசனை வடகிழக்கை நிரந்தரமாக இணையாமல் தடுத்தது. ஈற்றில் வடக்கும் கிழக்கும் பிரிந்தது.
அனால் அன்று அந்த யோசனைக்கு பெயரளவிலேனும் ஆதரவளிக்க நீங்கள் யாரும் முன் வரவில்லை.
ஆனால் இன்று நிலைமை வேறு, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது இந்த யோசனை எமக்கு தேவையில்லை. ஆனால் நீங்கள் அதை கையில் எடுத்துள்ளது அரசியல் தந்திரம் அல்லாது வேறொன்றும் இல்லை. வடகிழக்கை பிரிக்க எம் தலைமை உபயோகித்த யுக்தியை மீண்டும் வடகிழக்கை இணைக்க நீர் பயன்படுத்த முனைவதுதான் அரசியல்.
இந்நாட்களில் முஸ்லிம்களின் சுயாட்சியை பற்றி தமிழ் தலைமைகள்தான் அதிகம் கவலைப்படுகின்றனர். எமக்கு ஒரு சுயாட்சி தேவையில்லை ஐயா, அது சாத்தியமில்லை என்பது உமக்கு தெரியாமலும் இல்லை.
வடகிழக்கிட்கு வெளியில் எம் சமூகத்தின் 2/3 பகுதியினர் வாழும் போது, 1/3 பங்கு நாங்கள் மாத்திரம் சுயாட்சி கேட்பது எதட்காக?
சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 7 மாகாணங்கள் இருக்கும்பொழுது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் 2 மாகாணங்கள் இருப்பதில் என்ன தவறு இருக்கின்றது?
ஈற்றில் ஒரு விடயம் மாத்திரம் ஐயா,
தமிழர்களை நம்புவதட்கு முஸ்லிம்களிடம் ஒரு நியாயமான காரணங்களும் கிடையாது ஐயா, அனால் நம்பாமல் இருப்பதட்கு பல நூறு கழுத்தறுப்புகளும் காட்டிக்கொடுப்புகளும் அவலங்களும் காரணங்களாக உள்ளன ஐயா....
நன்றி.
அருமை அருமை அருமை
DeleteSuper! very exactly said bro. Abdul... we can trust enemy.. not hypocrisy!
ReplyDeleteCould you able present your justification implemented for Muslims with supportive documents. Past records may review you word worthwhile.
ReplyDelete