"தேர்தல்முறை மாற்றமும், முஸ்லிம்களின் எதிர்காலமும்"
'தேர்தல்முறை மாற்றமும் முஸ்லிம்களின் எதிர்காலமும்| என்ற தலைப்பில் கருத்தரங்கொன்றினை சியன மீடியா சேர்க்கிள் ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு கஹட்டோவிட்ட ஷாபி சென்டரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீத் விளக்கவுரை வழங்கவுள்ளார்.
சேர்க்கிள் தலைவர் எம். இஸட். அஹமத் முனவ்வர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்மேலதிக தேர்தல் ஆணையாளர் அஷ்ஷெய்க் எம்.எம். முஹம்மத்இ ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சியன மீடியா சேர்க்கிள் இணையத்தள அங்குரார்ப்பணமும் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதித்தலைவர் கலாநிதி யூஸுப் கே. மரிக்கார் இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ளார்.
அத்தோடு, ஓய்வுபெற்ற பரீட்சை ஆணையாளர் ஏ. எஸ். முஹம்மத்இ இந்நிகழ்வின் போது பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட மாகாணஇ பிரதேச உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள்இ புத்திஜீவிகள் உட்பட பெருந்தொகையானோர் பங்கேற்கவுள்ளனர்.
Post a Comment