Header Ads



தாஜுதீன் விவ­கா­ரத்தில் ஏன், உண்­மை­களை மூடி­ம­றைக்­கின்­றனர்..? மங்­கள

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ராஜபக் ஷக்­களின் குற்­றங்­களை மூடி­ம­றைக்­க­வேண்­டிய தேவை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஒரு­போ­து­மில்லை. ராஜபக் ஷக்கள் குறித்த வழக்­கு­களை முன்­னெ­டுக்­கும்­போது ஒரு­சிலர் தடுப்­ப­தாக நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். பிணை­முறி விவ­கா­ரத்தில் அக்­க­றை­ காட்டும் நபர்கள் ஏன் தாஜுதீன் விவ­கா­ரத்தில் உண்­மை­களை மூடி­ம­றைக்­கின்­றனர் எனவும் அவர் கேள்வி எழுப்­பினர். 

மாத்­தறை பகு­தியில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது. 

இன்று நாட்டில் தற்­போது நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­பட்­டு­வரும் சட்டம் ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு பொருந்­தாதா? அவர்கள் விட­யத்தில் சட்டம் செயற்­ப­டாத என்ற சந்­தேகம் எனக்குள் எழு­கின்­றது. ஏனெனில் அவர்கள் தொடர்­பு­பட்ட முக்­கி­ய­மான வழக்­குகள் அனைத்தும் விசா­ர­ணைக்­காக  முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் எங்­கா­வது ஒரு இடத்தில் அவை தடைப்­ப­டு­கின்­றது. அர­சியல் கார­ணி­க­ளுக்­காக அவர்­களை பாது­காக்கும் சிலர் அவ்­வாறு செய்­வ­தனால் மக்கள் எம்­மையும், பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் திட்டித் தீர்க்­கின்­றனர். எவ்­வாறு இருப்­பினும் இந்த அர­சாங்­கத்தில் மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட ராஜபக் ஷ குடும்­பத்தை காப்­பாற்­றவோ, கொலை­கா­ரர்­களை, கொள்­ளைக்­கா­ரர்­களை பாது­காக்­கவோ அவர்கள் தொடர்­பி­லான குற்­றங்­களை மூடி­ம­றைக்­கவோ ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எந்­த­வித தேவையும் இல்லை. 

மத்­திய வங்கி பிணைமுறி விவ­கா­ரத்தில் சட்­டமா அதிபர் திணைக்­களம் காட்­டிய அக்­க­றையில் பத்து வீதத்­தை­யேனும் ராஜபக் ஷக்களின் குற்­றங்­களை கண்­ட­றிய முன்­வ­ர­வில்லை என்­பதே உண்­மை­யாகும். அவர்­களின் குற்­றங்­க­ளையும் அவ்­வாறே விசா­ரித்­தி­ருந்தால் அவர்கள் செய்த மிகப்­பெ­ரிய ஊழல், மோச­டிகள், கொலை என்­ப­னவும் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கவும் முடிந்­தி­ருக்கும். மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் எமது அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் யார் யாருக்கோ தொலை­பேசி அழைப்­பு­களை எடுத்­த­தா­கவும் கூறி வரு­கின்­றனர். எமது அர­சாங்­கத்தின் மீது பழி சுமத்­தவும் ,சம்­ப­வங்­களை திசை­தி­ருப்­பவும் இவ்­வா­றான கருத்­துக்­களை கூறி வரு­கின்­றனர். இந்த விவ­கா­ரத்தில் அக்­க­றை­யுடன் செயற்­படும் நபர்­க­ளுக்கு ஏன் தாஜுதீன் கொலை சம்­ப­வத்தில் அன்­றைய இரவு எத்­தனை தொலை­பேசி அழைப்­புகள் பதி­வா­கி­யுள்­ளது என்­பது குறித்தும் ,யார் யார் தொடர்­பு­பட்­டுள்­ளனர் என்­பது குறித்தும் நாட்டு மக்கள் மத்­தியில் தெரி­விக்­க­வில்லை. உண்­மை­களை சிலர் மறைத்­து­ விட்­டனர். 

யார் எதற்­காக இவ்­வாறு செய்­கின்றனர் என்று தெரி­ய­வில்லை. நல்­லாட்சி காலத் திலும் முன்­னைய குற்றவாளிகளின் ஆவி கள் நிறுவனங்களில் இருந்து இவற்றை மறைத்து வருகின்றதோ தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் மாத்திரம் இவ்வாறு தடைகள் ஏற்பட்டு வருகின்றன. இதையும் அனைவரும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. இப்படி இத சொல்ல வெட்கம் இல்லையா? இந்த அரசாங்கத்தில் நீங்களும் ஒரு அமைச்சர் தானே.. நீதி அமைச்சரும் உங்க ஆள்தானே.. சட்டமாதிபர் திணைக்களம் உங்களின் நீதி அமைச்சரிடம் தானே உள்ளது.. நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்துகிறீர்கள் என்பது தான் உண்மை..

    ReplyDelete

Powered by Blogger.