Header Ads



பல்டி அடித்து, வாக்காளர்களை காட்டிக்கொடுக்கேன் - ரஞ்சன்

கட்சித்தாவல் குறித்து வெளியான செய்திகளுக்கு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மறுப்பு வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை விடுத்துள்ள அவர், இந்த விடயத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அந்த டுவிட்ட பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நான் வீட்டிற்கு சென்றாலும் செல்வேன். ஆனால் ஒருபோதும் கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன்.

கட்சித்தாவல் குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை. என்னுடைய வாக்காளர்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன். அவர்களுக்கு கொடுத்த உறுதிமொழியை காப்பாற்ற போராடுவேன்” என அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.