Header Ads



நீளமான ஆடை அணியச்சொன்ன ஆசிரியைக்கு, அச்சுறுத்தல் விடுத்த தகப்பன்

பாடசாலையின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஆசிரியை ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் நபர் குறித்து புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

கடந்த 13ம் திகதி தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியொருவர் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவான நீளம் கொண்ட சீருடையை அணிந்து வந்துள்ளார். 

இதனை கண்ணுற்ற ஆசிரியை மறுநாள் நீளமான சீருடையை அணிந்து வருமாறு, கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவி தொலைபேசி மூலம், இது பற்றி தந்தைக்கு கூறியுள்ளார். 

இதனால் ஆத்தரமடைந்த அவர், பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, குறித்த ஆசிரியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக தெரிகிறது. 

எனவே, இந்த விடயம் தொடர்பில் அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் தெரியப்படுத்திய, ஆசிரியை புத்தளம் பொலிஸிலும் முறையிட்டுள்ளார். 

இதற்கமைய, நேற்று குறித்த பாடசாலைக்கு பொலிஸார் சென்று சம்பவம் இடம்பெற்ற போது, அங்கிருந்த, ஏனைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விசாரித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.