Header Ads



ஆட்டோ சாரதிகளுக்கு "டுக் டுக்" இலட்சனை வழங்கப்படும்

போக்குவரத்து அமைச்சின் கீழ், முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது முன்வைக்கப்படும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் விஷேட பயிற்சி ஒன்று அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு "டுக் டுக்" இலட்சனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதுடன், அது தற்போதும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.