Header Ads



பொலிஸ் அதிகாரிகளின், விடுமுறைகள் இரத்து

தற்சமயம் விடுமுறையில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும்,விடுமுறைகளை இரத்து செய்யுமாறு சட்டம்,ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர் டீ.சி.விக்கிரமரத்னவுக்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினைக் கருத்திற்கொண்டே அமைச்சரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தவர்களின் வீடுகளில் இடம்பெறும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக பொலிஸ் காவலரண்களை அமைத்து கண்காணிப்பில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.