Header Ads



"பொறுங்கள் பொறுங்கள்..."

கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் சந்தித்தார் அல்லவா... அப்போது கருத்துத் தெரிவித்த கட்சித் தலைவர்கள் அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியை இணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி அதற்கு ஆதரவாக தீவிரமான கருத்துக்களைத் தெரிவித்தனராம் புதிய வியூகங்களை வகுக்க வேண்டும் என்றனராம்...

அப்போது பலமாகச் சிரித்த ஜனாதிபதி, 'யுத்தத்துக்குப் போகும்போது ஆயுதங்களை வெளியில் காட்டிக்கொண்டு போக மாட்டார்கள்... பொறுங்கள் பொறுங்கள்..." என்று சொன்னாராம்...

எப்படியோ மஹிந்த ராஜபக்ஷ அணியுடன் பேசுவதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாம்... எம்.பிக்களான ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் எம்.பிக்களான அதாவுல்லா, டியூ குணசேகர ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். சுதந்திரக் கட்சி அமைச்சர் ஒருவரும் இதில் உள்ளடக்கப்படுவார் எனச் சொல்லப்படுகின்றது.

No comments

Powered by Blogger.