Header Ads



முஸ்லிம்களின் அச்சத்தை, அரசாங்கம் போக்குமா..??

காலியின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இன­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தென் மாகாண முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மன்றி முழு இலங்கை முஸ்­லிம்­க­ளையும் அதிர்ச்­சி­யிலும் அச்­சத்­திலும் ஆழ்த்­தி­யுள்­ளது.

கடந்த 13 ஆம் திகதி இடம்­பெற்ற வீதி விபத்துச் சம்­பவம் ஒன்றை இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­க­லா­கவும் மோத­லா­கவும் மாற்­று­ம­ள­வுக்கு இரு தரப்­பிலும் தவ­றுகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன. 

இரு சமூ­கங்­க­ளையும் சேர்ந்த பொறுப்­பு­ணர்ச்­சி­யற்ற இளை­ஞர்கள் சிலர் தமக்­கி­டையில் முரண்­பட்டுக் கொண்­ட­மை­யா­னது, இப் பகு­தியில் இன­வா­தத்தைத் தூண்டி முஸ்­லிம்­களைக் கரு­வ­றுக்கத் தருணம் பார்த்­தி­ருந்த சக்­தி­க­ளுக்கு வாய்ப்­பினை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது என்­பதே கசப்­பா­யினும் உண்­மை­யாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்­க­மவில் இடம்­பெற்ற பாரிய வன்­மு­றை­க­ளுக்கு அடுத்­த­தாக இடம்­பெற்ற குறிப்­பி­டத்­தக்க வன்­முறைச் சம்­ப­வ­மாக 2017.11.17 அன்று காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. 

எவ்­வாறு அளுத்­க­மவில் பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பார்த்­தி­ருக்க அளுத்­க­மவில் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­ட­னவோ, அதே­போன்­றுதான் கிந்­தோட்­டை­யிலும் பொலிசார் மற்றும் விசேட அதி­ரடிப் படை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன் இன­வா­திகள் தமது கைவ­ரி­சையைக் காட்­டி­யுள்­ளனர்.

ஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் படை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன் அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டது போன்று, கிந்­தோட்­டை­யிலும் பாது­காப்பு படை­யி­னரின் பிர­சன்னம் திட்­ட­மிட்டு குறைக்­கப்­பட்டே இத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதற்­கான சாட்­சி­யாக அப் பகுதி வாழ் முஸ்லிம் மக்கள் உள்­ளனர். அப்­ப­டி­யானால் பதற்­றமும் அச்­சமும் நில­விய அப் பகு­தி­யி­லி­ருந்து முன்­ன­றி­வித்­த­லின்றி பாது­காப்பை விலக்­கு­வ­தற்­கான உத்­த­ரவை வழங்­கி­யது யார்? அர­சி­யல்­வா­தி­களா அல்­லது பாது­காப்பு அதி­கா­ரி­களா என்­பது கண்­ட­றி­யப்­பட வேண்டும்.

கடந்த அர­சாங்­கத்தில் அர­சி­யல்­வா­தி­களும் பாது­காப்பு உய­ர­தி­கா­ரி­களும் இன­வாதக் கண்­ணோட்­டத்தில் நடந்து கொண்­டதன் கார­ண­மா­கவே இலங்கை வாழ் முஸ்­லிம்கள் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டுக்கு அனுப்­பினர். அது­மாத்­தி­ர­மன்றி தற்­போதை ஆட்­சி­யா­ளர்கள் தேர்­தல்­களில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நம்­பியே முஸ்­லிம்கள் நல்­லாட்சி அர­சொன்றை தாபிக்க வாக்­க­ளித்­தனர். 

துர­திஷ்­ட­வ­ச­மாக இந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்­திலும் இவ்­வா­றா­ன­தொரு கறை படிந்த சம்­பவம் தென் மாகாண முஸ்லிம் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இதன் மூலம் எந்­த­வொரு அர­சாங்­கத்­தி­னாலும் முஸ்­லிம்­க­ளின பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் வழங்க முடி­யாது எனும் அவ­நம்­பிக்­கையும் அச்­சமும் முஸ்­லிம்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது. கிந்­தோட்டை பிர­தே­சத்­திற்கு கடந்த சில தினங்­க­ளாக விஜயம் செய்த பிர­தமர் உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்­க­ளிடம் முஸ்­லிம்கள் இந்தக் கருத்­தையே திரும்பத் திரும்ப வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

என­வேதான் தற்­போ­தைய அர­சாங்கம் அர­சி­யல்­வா­திகள் மத்­தி­யிலும் பாது­காப்பு தரப்­பினர் மத்தியிலும் உள்ள இனவாத சிந்தனை கொண்டவர்களை இனங்கண்டு அவர்களை பதவி நீக்கம் செய்யவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்திலும் இவ்வாறான வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவாது தடுக்க முடியும். இன்றேல் அன்று அளுத்கம, இன்று கிந்தோட்டை, நாளை எங்கே? எனும் முஸ்லிம்களின் அச்சத்தை எவராலும் போக்க முடியாது போய்விடும்.

விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிhயர் தலையங்கம்

No comments

Powered by Blogger.