Header Ads



தங்கையை காப்பாற்ற சகோதரன் முயன்றபோது, இருவரும் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்தனர்

வவுனியா மாமடுவ வாவியில், குளித்துகொண்டிருந்த ச​கோதரனும் சகோதரியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என மாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்குளம் பிரதேசத்தைச் வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதான சகோதரனும் அவருடைய 17 வயதான தங்கையுமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

குளித்துகொண்டிருந்த போது, ஆழமான பகுதிக்கு தங்கை சென்றுவிட்டாள் தங்கை, நீரில் மூழ்கி கொண்டிருந்ததை அவதானித்த ச​கோதரன், ஒருவாறு தங்கையை காப்பாற்றியுள்ளார்.

தங்கையை காப்பாற்றிக்கொண்டு, மேலே வருவதற்கு முயன்றபோதே, இவ்விருவரும் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.