Header Ads



"ஜெனீ­வாவில் இலங்கை முஸ்­லிம்­ககள், பற்றி எதுவுமில்லை" - பச்சையாக பொய் சொன்ன இலங்கை


ஜெனீ­வாவில் சர்­வ­தேச நாடு­களின் மனித உரிமை விவ­காரம் தொடர்­பான பூகோள காலக்­கி­ரம மீளாய்வுக் கூட்டத் தொடர் நடை­பெற்று வரும் நிலையில் அங்கு இலங்கை முஸ்­லிம்­களின் உரி­மைகள் சார்ந்த விவ­கா­ரங்கள் பேசப்­ப­ட­வில்லை எனவும் எந்­த­வொரு நாடும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அநீ­திகள் தொடர்பில் கேள்­வி­யெ­ழுப்­ப­வில்லை என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

சர்­வ­தேச நாடு­களின் மனித உரிமை விவ­காரம் தொடர்­பான பூகோள  காலக்­கி­ரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் நேற்று முன்­தினம் மாலை 2.30 மணி முதல் 6 மணி வரை இலங்கை தொடர்­பான நிலை­வரம் ஆரா­யப்­பட்­டது.

இதன்­போது இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் தொடர்பில் நூற்­றுக்கும் மேற்­பட்ட நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்கைப் பிர­தி­நி­தி­க­ளிடம் கேள்­வி­களை எழுப்­பி­ய­துடன் பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைத்­தனர். இருப்­பினும் எந்­த­வொரு நாடும் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வாத செயற்­பா­டுகள் தொடர்­பிலோ வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களின் உரி­மைகள் தொடர்­பிலோ  கேள்­வி­களை எழுப்­பவோ பரிந்­து­ரை­களை முன்­வைக்­கவோ இல்லை என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர்  எம்.எம்.அப்துர் ரஹ்மான் 'விடி­வெள்ளி'க்குத் தெரி­வித்தார்.

மேற்­படி கூட்டத் தொடரில் சுயா­தீன அவ­தா­னிப்­பா­ள­ராகக் கலந்து கொள்ளும் நோக்கில் ஜெனீ­வா­வுக்கு சென்­றுள்ள அப்துர் ரஹ்மான், அங்­குள்ள நிலை­மைகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தகவல் தரு­கையில், இக் கூட்டத் தொடரில் இலங்­கையின் மனித உரிமை நிலை­வ­ரங்கள் தொடர்பில் பல நாடுகள் கேள்­வி­க­ளை­யெ­ழுப்­பின. துர­திஷ்­ட­வ­ச­மாக எந்­த­வொரு நாடும் இலங்கை முஸ்­லிம்­களின் நிலை­மைகள் குறித்து பேச­வில்லை. சவூதி அரே­பிய நாட்டின் பிர­தி­நிதி கூட இலங்­கையில் வறுமை ஒழிப்­புக்கு என்ன செய்­கி­றீர்கள்? என்றே கேள்­வி­யெ­ழுப்­பினார்.  இது இலங்கை முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்கள் தொடர்பில் நாம் எந்­த­ளவு தூரம் சர்­வ­தேச நாடு­களின் கவ­னத்­திற்குக் கொண்டு சென்­றுள்ளோம் என்ற கேள்­வியை எழுப்­பு­வ­தா­க­வுள்­ளது. 

இன­வாத செயற்­பா­டுகள் குறித்து கேள்­விகள்

இந்த கூட்டத் தொடரில் இலங்­கையில் இடம்­பெறும் இன­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் பல நாடுகள் கேள்­வி­யெ­ழுப்­பின. குறித்த கேள்­வி­க­ளுக்கு இலங்கை சார்பில் பதி­ல­ளித்த வெளி­வி­வ­கார பிர­தி­ய­மைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா  உண்­மைக்குப் புறம்­பான விட­யங்­க­ளையே பதி­லாக முன்­வைத்தார்.

இலங்­கையில் வெறுப்புப் பேச்சை தடுப்­ப­தற்கு என்ன நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளீர்கள் என கேட்­கப்­பட்ட கேள்­விக்கு, தாம் ஐ.சி.சி.பி.ஆர். ( சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு உடன்­ப­டிக்கை)  இன் கீழ் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் இன­வாத மத­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எந்­த­வித அனு­ம­தி­யையும் அர­சாங்கம் வழங்­க­வில்லை என்றும்  ஹர்ஷ டி சில்வா பதி­ல­ளித்தார். பொலிஸ் மா அதிபர் இது­வி­ட­யத்தில் மிகவும் கண்­டிப்­பாக நடந்து கொள்­வ­தா­கவும் இன­வாத செயல்­களில் ஈடு­ப­டு­வோரை கைது செய்­வதில் இலங்கைப் பொலிசார் விரைந்து செயற்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். எனினும் இது முழுக்க முழுக்க சர்­வ­தேச நாடு­களை தவ­றாக வழி­ந­டாத்தும் பொய்­யான பதி­லாகும். 

மேற்­படி  ஐ.சி.சி.பி.ஆர். உடன்­ப­டிக்­கையை அர­சாங்கம் இலங்­கையில் சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்தால் இன­வாதம் பேசிய சகல பௌத்த பிக்­கு­க­ளையும் ஏனைய இன­வா­தி­க­ளையும் இதன் கீழ் கைது செய்­தி­ருக்க வேண்டும். ஆனால் தந்­து­ரையில் முக­நூலில் புத்­தரை அவ­ம­தித்து பதி­விட்­ட­தாகக் கூறப்­படும் முஸ்லிம் இளை­ஞரை மாத்­தி­ரமே மேற்­படி சட்­டத்தின் கீழ் கைது செய்து விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர். அந்த வகையில் அர­சாங்கம் பார­பட்­ச­மான முறை­யி­லேயே இச் சட்­டத்தை இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக இலங்­கையில் இது­வரை இடம்­பெற்ற நூற்றுக்கணக்­கான சம்­ப­வங்கள் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்ட பொலிஸ் முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய மேற்­படி சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். எனினும் அதனை பொலிசார் செய்­ய­வில்லை. இவ்­வா­றான நிலையில் அர­சாங்க பிர­தி­நிதி ஜெனீ­வாவில் அளித்த பதில் கவ­லைக்­கி­ட­மா­ன­தாகும்.

தெளி­வு­ப­டுத்த நட­வ­டிக்கை

இந் நிலையில் இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் உண்­மை­யான பிரச்­சி­னைகள் தொடர்பில் நான் ஜெனீ­வாவை தள­மாகக் கொண்­டி­யங்கும் பல்­வேறு சர்­வ­தேச சமூகப் பிர­தி­நி­தி­க­ளு­டனும் இராஜ தந்­தி­ரி­க­ளு­டனும் அதே போன்று சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளு­டனும் விசேட சந்­திப்­புக்­களை இன்றும் நாளையும் நடத்­த­வுள்ளேன்.

இதன்­போது இலங்­கையில் தொடரும் இன­ம­த­வாத அச்­சு­றுத்­தல்கள்,  வடக்கு முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்­த­லுள்ள சவால்கள், வடக்கு கிழக்கு தமிழ்-­முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் காணிப் பிரச்­சி­னைகள், அரச படைகள் மற்றும் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்படும் காணிகள், புதிய தேர்தல் திருத்த சட்டம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், அளுத்கம போன்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் ,  சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் காட்டப்பட்டு வரும் பாரபட்சமான அணுகு முறை மற்றும் இனங்களுக்கிடையலான நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எடுத்துரைக்கவுள்ளதுடன் அறிக்கைகள் , ஆவணங்களையும் சமர்ப்பிக்கவுள்ளேன் என்றார்.

2 comments:

  1. இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு உணர்த்தல்: உங்களை முஸ்லிமல்லாத ஏனையவர்கள் உங்களுக்கு அனியாயம் செய்து உங்களை துன்புருத்தி கொலைசெய்தாலும் அரபு நாட்டு தலைவர்கள் அதன் அரசாங்கம் உங்களுக்கு உதவிகரம் நீட்டுவார்கள் என்று ஒருபோதும் ஆகாயக்கோட்டை கட்டவேண்டாம் அங்குள்ள சிலமக்களிடம் இஸ்லாமிய பண்பாட்டு உணர்வுகள் இருக்கின்றன ஆனால் தலைவர்களும் அரசாங்கமும் இதிலிருந்து வெகு தூரமானவர்கள் என்பதை புரிந்து நம்மலுடன் வாழும் வேற்றுமத மக்களுக்கு நல்லது செய்து அவர்களுக்கு நம் இஸ்லாமிய பண்புகளை அறியவைத்து உணர்வூட்டி சினேகிதனாக வாழ முயற்சிப்போம் அவர்கள் திட்டமிடாமல் தவருதலாக நமக்கு பிழை செய்துவிட்டால் அவர்களை மன்னித்து வாழ்வோம்.

    ReplyDelete
  2. May almighty Allah acknowledge your meritorious deed! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.