Header Ads



இலங்­கையில் இஸ்­லா­மிய, பயங்­க­ர­வா­தி­களின் ஆயு­தங்கள், எம்­மை கொல்ல வாய்ப்­புகள் உள்­ளன - ஞான­சார

சர்­வ­தேச நாடு­களின் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­களின் ஆயு­தங்கள் இலங்­கைக்குள் வந்­துள்­ளன, இலங்­கையில் கைத்­துப்­பாக்­கிக்கு அனு­ம­தி­யில்­லாத நிலையில் சினைப்பர் ரகத்திலான துப்­பாக்கி எவ்­வாறு முஸ்லிம் நபரின் கைக­ளுக்கு கிடைத்­தது  என பொது­பல சேனா பெளத்த அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பினர். 

எம்மை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தப்­ப­டுமோ என்ற அச்சம் எழுந்­துள்ளது என்னும் அவர் குறிப்­பிட் டார். 

பொது­பல சேனா பெளத்த அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று இடம்­பெற்ற போது கருத்­தினை அவர் குறிப்­பிட்டார். இது குறித்து மேலும் கூறி­ய­தா­வது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளி­நாட்டில் இருந்து மிகவும் பயங்­க­ர­மான சினைப்பர் ரக (gv15/2213) இயந்­திர துப்­பாக்கி ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இங்கு முஸ்லிம் நபர் ஒரு­வரே இந்த துப்­பாக்­கியை பெற்­றுள்ளார். இந்த சம்­பவம் குறித்த சகல தக­வல்­களும் எம்­மிடம் ஆதா­ரத்­துடன் உள்­ளன. 

அதேபோல் குறித்த நபர், அவ­ரது அடை­யாள அட்டை இலக்கம் என்­ப­னவும் எம்­மிடம் உள்­ளன. ஆகவே பாது­காப்பு அமைச்சை தாண்டி எவ்­வாறு இந்த துப்­பாக்கி  இலங்­கைக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டது? இலங்­கையில் நபர் ஒரு­வ­ருக்கு சாதா­ரண கைத்­துப்­பாக்கி ஒன்றை பயன்­ப­டுத்­தவே அனு­மதி இல்­லாத நிலையில் இவ்­வா­றான மோச­மான துப்­பாக்கி எவ்­வாறு அனு­ம­திக்­கப்­பட்­டது. இந்த துப்­பாக்கி மூல­மாக வெடிச்­சத்தம் கேட்­காது சுடும் சில கரு­வி­களும் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. 

இதனை பயன்­ப­டுத்தி யாரை வேண்டும் என்­றாலும் இலக்கு வைக்க முடியும். அரச தலை­வர்­களை, அர­சியல் வாதி­களை, முக்­கிய பிர­மு­கர்­களை, வியா­பா­ரி­களை யாரையும் சுட முடியும். ஆகவே இந்த சம்­பவம் சாதா­ரண விடயம் அல்ல. எம்­மைக்­கூட இலக்கு வைக்கக்கூடும் என்ற அச்­சமும் உள்­ளது, இந்த நாட்டில் பல்­வேறு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் உள்­ளன. நாம் இந்த நாட்டில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் குறித்து தொடர்ச்­சி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­ வ­ரு­கின்ற நிலையில் எம்­மைப்­போன்ற நபர்­களை கூட கொல்ல வாய்ப்­புகள் உள்­ளன. 

எனவே ஜனா­தி­பதி உட­ன­டி­யாக இந்த விடயம் குறித்து கவ­னத்தில் கொள்ள வேண்டும். சாதா­ரண விட­ய­மாக இவற்றை கரு­தக்­கூ­டாது. உல­கத்தில் இன்று இடம்­பெறும் சம்­ப­வங்கள், இஸ்­லா­மிய பயங்க­ர­வாத செயற்பாடுகளின் காரணமாக இடம்பெறும் அழிவுகள் அனைத்தையும் நாம் அறிந்துள்ளோம். அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் அவ்வாறான ஒரு சூழலை உருவாக்க எவரும் இடமளிக் கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

9 comments:

  1. why dont he produce all the information to the TID instead of publicise the matter. it's not because of weapon. just creat a another chaos among the community in different way. may Allah subhanahuwathala protect all muslimeen.

    ReplyDelete
  2. கூட்டு முஸ்லிம்களுடன் சேர்ந்த இவனுக்கும் வஹ்ன் வந்துவிட்டது

    ReplyDelete
  3. மொட்டைக்கு நட்டு லூசாகி விப்டது போல் சும்மா எதையாவது சொல்லி உலரிக்கொண்டுதான் உள்ளான்.

    ReplyDelete
  4. இது இவர்களின் அடுத்த கட்ட காய் நகர்தல். பெரியொரு சதிதிட்ட ஏட்பாடு பண்ணப்படுகிறது. முஸ்லிம்களை வேட்டை ஆடுவதுக்கு மேட்கொள்ளப்படும் சதி திட்டமே இது. இந்த கூட்டத்தினருக்கு வேண்டியவர்கள் மூலம் இந்த துப்பாக்கியை கொண்டுவந்திருக்கக் கூடும். அவர்களால் அரசியல்வாதிகளை பழிதீர்க்க கூடும் அனால் அந்த பழியை முஸ்லிம்களில் போடுவதுக்குரிய முன்னேட்பாடே இது. எனவே முஸ்லிம் தலைவர்களே! முஸ்லிம் சமூக தொண்டர்களே! மேலும் பெரியர்வர்களே நாங்கள் இந்தவிடயத்தை சற்று நிதனமாக சிந்தித்து அரசாங்கத்தின் உயரதிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லுவது எங்கள் தலைவர்களின் கட்டாய கடைமையாகும். இவரை CIDயினர் உடனடியாக விசாரணையா செய்து அவற்றை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையேல் இது எங்கள் சமூகத்தில்தான் வந்து விழும்.

    ReplyDelete
  5. Why he is not complaining about the T56s, Claymore Bombs,Hand grenades, Kadu, Kinisa, etc. that killed so many ones in Daylight in so many incidents. He is colour blind I suppose.It was once reported that he too got shooting training and handling of weapons during the last regime.

    ReplyDelete
  6. Why he is not complaining about the T56s, Claymore Bombs,Hand grenades, Kadu, Kinisa, etc. that killed so many ones in Daylight in so many incidents. He is colour blind I suppose.It was once reported that he too got shooting training and handling of weapons during the last regime.

    ReplyDelete
  7. இது எதற்கோ அடித்தளம் போடப்பட்ட தந்திரமாகும் அணைவரும் விழிப்புடன் இருககவேண்டிய தருணத்தில் நாம் அணைவரும் அல்லாஹவிடம் பாதுகாக்கப்பையும் நாட்டுமக்களையணைவரும் நட்புடனும் இந்த கோழைகளின் குள்ளத்ணத்தை அழித்துவிடுமாறு நாம் ஒவ்வொரு தொழுகைக்கும் பின்பு துவாசெய்யுங்கள் நாம் இந்தக் நயவஞ்சகர்களின் ஆட்சீயில் நீதி கிடைக்காது என்பதை புரிந்துகொள்ளவில்லை என்றால் நாம் அழிக்கப்படுவோம் இவன் ஒரு அம்பு எயகிறவன் ஆட்சி அதனால் எவனையும் நம்ப வேண்டாம்

    ReplyDelete
  8. He is an idiot and he does not have common sense.
    He is a self proclaimed police man of Sri Lanka. It is time to take action ..
    Government should act now to arrest him..
    Problem is that he is an agent of some politicians.
    They use him as and when they need him.sometime; to get vote from sinahslese ..
    But 90% people know he is fake man

    ReplyDelete
  9. (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
    (அல்குர்ஆன் : 3:186)

    முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
    (அல்குர்ஆன் : 3:200)

    ReplyDelete

Powered by Blogger.