Header Ads



ஜிந்தோட்டையில் கைதான முஸ்லிம்மை, கசிப்பு வியாபாரியாக்கிய தெரன தொலைக்காட்சி

ஜிந்தோட்டை சிங்கள மற்றும் முஸ்லிம்களிடையே பெயர் பெற்று விளங்கிய ஹூஸைன் கியாஸ் பற்றிய செய்தியை ஒளிபரப்பியுள்ள தெரன தொலைக்காட்சி அவரை கசிப்பு வியாபாரி என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தெரன தொலைக்காட்சியுடன் உடனடியாக தொடர் கொண்டுள்ள முஸ்லிம் முPடியா போரம் தலைவர் என்.எம். அமீன்  ஹூஸைன் கியாஸ்  பற்றிய உண்மை நிலவரத்தை விளக்கிக் கூறியுள்ளார்.

இதையடுத்து தெரன தொலைக்காட்சி இதுபற்றி, தாம் பகிரங்க மன்னிப்பு கேட்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஜிந்தோட்டயில் கைதான முஸ்லிம்களை இழிவுபடுத்தி சிங்கள் ஊடகங்கள் கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜிந்தோட்டை  பிரதேச சபை முன்னால் உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஹூஸைன் கியாஸ் அவர்களும் கைது செய்யப்பட்டார். இங்கு ஹூஸைன் கியாஸ் என்பவர் குறித்த முஸ்லிம் இளைஞர்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காகவே குறித்த இடத்திற்கு சமூகமளித்திருந்தார் என்பதும் ஊரில் இன, மத பேதம் பாராது சேவையாற்றுபவர் என்பதும், தான் கற்ற சிங்களப் பாடசாலையான காஃ கிந்தோட்டை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளராக சிங்கள சகோதரர்களாகலேயே தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறித்த சம்பவத்திற்கு அவரும் காரணம் என்று சிங்கள இனவாத ஊடகங்களில் அவர் பற்றிய பிழையான செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றது எனபதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமாகும்.

2 comments:

  1. ஊடக விபச்சாரத்தின் மற்றுமொரு வடிவம். தமது சேவைகளின் சந்தைப்படுத்துதலுக்கு முஸ்லிம்களின் மானம் மேம்படுத்தலாக பயன்படுத்தப்படுகிறது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.