Header Ads



தீர்மானங்கள் இன்றி, கலைந்துசென்ற தலைவர்கள்


சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டம் தீர்மானங்கள் இன்றி நிறைவுக்கு வந்தது.

குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதில் உள்ள தாமதம் குறித்தே இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எனினும் தேர்தலை நடத்தும் திகதி குறித்து இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படாத நிலையில் இந்த கலந்துரையாடல் நிறைவுபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை மீண்டும் கூடி இது தொடர்பில் ஆராய முடிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.