வன்முறையை தடுத்திருக்கலாம், ஜிந்தோட்ட பற்றிய சிறப்பு விசாரணையில் அம்பலம்
-MFM.Fazeer-
கிந்தோட்டை வன்முறைகள் இடம்பெற முன்னரேயே அவற்றைத் தடுத்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவை தவறவிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன. தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ. பெர்ணான்டோவின் மேற்பார்வையில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக்கோனின் கட்டுப்பாட்டில் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இது தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி கிந்தோட்டை வன்முறைகளின் போது சிங்கள, முஸ்லிம் சமூகத்தவர்களுக்குச் சொந்தமான 81 வீடுகள், 18 வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 6 முச்சக்கர வண்டிகளும், ஒரு லொறியும், வேன் ஒன்றும், 8 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனைவிட நான்கு பள்ளிவாசல்களும் இதன்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் 8 திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதனைவிட சமூக வலைத்தளங்கள் ஊடாக மோதலைத் தூண்டும் வகையிலான பதிவுகளை இடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கணினிக் குற்றங்கள் பிரிவும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மொத்தமாக (ஆரம்ப சம்பவங்கள் உட்பட) 22 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனியாயங்கள் நடக்கும்போது எப்போதுமே மௌனித்துப் பார்த்திருக்கின்ற - நம்முடைய ஜனாதிபதி மைத்திரி இருக்கும்வரை இவ்வாறான சம்பவங்கள் - இலங்கையில் நடப்பதென்பது அதகரிக்குமே ஒழிய - அது குறைவடய எந்தவகையிலும் சாத்தியமே இல்லை.
ReplyDeleteசிறுபான்மையாகிய நாம் இது பற்றி மிக ஆழமாக சிந்தித்து செயல்படவேன்டிய கட்டாய தருணம் இது.
மாற்றீடாக மகிந்தவை சிந்திப்பது ஒன்றும் தவறில்லை - ஒரு சில சாத்தியப்பாடான - அவசியமன - மீன்டும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான - நிபந்தனைகளுடன்.
Mr. Mahithriya also behind Aluthgama And Ginthota incident.... Now its very clear and it will come out very soon...
ReplyDeleteMohamed Raffi இது ஒருவேளை மஹிந்தவின் ஏற்பாட்டில் நடந்திருந்தால்??
ReplyDeletewe are waiting for our time,
ReplyDelete