Header Ads



சிங்களக் காடையர்களே பிக்குவின் ஆதரவுடன், முஸ்லிம்கள் மீது தாக்குதல்


ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. வெளியிடத்தில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

“வெள்ளிக்கிழமை இரவு வந்த வெளியிடத்தை சேர்ந்த குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

“இந்த வன்முறைகளின் போது அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு அருகிலேயே இந்த வன்முறைகளை மேற்கொண்ட குழுவினர் தங்கியிருந்தனர்.

பௌத்த பிக்கு ஒருவரின் பின்புலத்திலே இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக அந்த பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தன்னிடம் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.

படங்கள் – அஸ்ஸம் அமீன்


No comments

Powered by Blogger.