Header Ads



பள்­ளி­வா­ச­லுக்கும், கடை­க­ளுக்கும் பொலிஸ் பாது­காப்பு


-ARA.Fareel-

வவு­னியா பஸார் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான கடைத் தொகு­தியில் ஏற்­பட்ட தீ அனர்த்­தத்­தினால் மூன்று கடை­க­ளுக்கு 31 ½ இலட்சம் ரூபா நஷ்­ட­மேற்­பட்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வா­ச­லுக்கும், பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான ஏனைய கடை­க­ளுக்கும் சி.சி.ரி.வி கமெரா பொருத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் வவு­னியா பஸார் ஜும்ஆ பள்­ளி­வாசல் உப தலைவர்  யூசுப் நஸார் தெரி­வித்தார். 

இதே­வளை பள்­ளி­வா­ச­லுக்கும், பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான கடை­க­ளுக்கும் பொலிஸ் பாது­காப்பு தொடர்ந்து வழங்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் தீ அனர்த்தம் தொடர்பில் விப­ரிக்­கையில் முற்­றாக தீயினால் சேத­ம­டைந்த பை விற்பனை கடைக்கு 25 இலட்சம் ரூபாவும் மற்றும் பென்சி கடைக்கு ஐந்து இலட்சம் ரூபாவும், பகுதியளவில் சேத­ம­டைந்த கடைக்கு 1 ½ இலட்சம் ரூபாவும்  நஷ்­ட­மேற்­பட்­டுள்­ளது.

இத் தீ அனர்த்தம் தொடர்பில் வட பிராந்­திய பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர், நகர சபையின் செய­லாளர், பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­திகள், கடை­களின் உரி­மை­யா­ளர்கள் என்போர் ஒன்றுகூடிக் கலந்­து­ரை­யா­டினர்.  கலந்­து­ரை­யா­டலின் போது சி.சி.ரி.வி கமரா பொருத்­து­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

கடந்த 31 ஆம் திகதி வவு­னியா பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான கடைகள் சட்­டத்­துக்கு முர­ணா­னவை என ஆர்ப்­பாட்டம் ஒன்று மேற்­கொள்­ளப்­பட்­டதால் வட பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ்மா அதிபர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட இரு­வரை அழைத்து விசா­ரணை மேற்­கொண்டார். விசா­ர­ணையின் போது சம்­ப­வத்­துக்கும் தங்­க­ளுக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை என அவர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

தீ அனர்த்தம் மின் ஒழுக்­கினால் ஏற்­பட்­டதா? அல்­லது நாச­கார செயலா? என்­பது தொடர்பில் வவு­னியா பொலிஸார் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர். தீயினால் சேத­ம­டைந்­துள்ள மூன்று கடை­க­ளையும் புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் தீர்­மா­னித்­துள்­ளது.

தீயினால் எரிந்த மாதி­ரிகள் இர­சா­யன பகுப்­பாய்­வு­க­ளுக்­காக கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இர­சா­யன அறிக்கையை பெற்­றுக்­கொண்­டதன் பின்பு மேல­திக நட­வ­டிக்­கை­களை பொலிஸார் தொட­ர­வுள்­ளனர்.

இதே­வேளை இன்று புதன்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பூரண ஹர்த்தால் இரத்து செய்­யப்­பட்­ட­தா­கவும் பள்­ளி­வாசல் உப தலைவர் யூசுப் நஸார் தெரி­வித்தார்.

சம்­பவம் இடம்­பெற்ற தினம் அதிகாலை1.30 மணியளவில் சம்பவம் நடைபெற்ற  இடத்திலிருந்து இருவர் ஓடிச்செல்வதை நேரில் கண்ட சாட்சியாளர் இன்று வட பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் திணைக்களத்துக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.    

No comments

Powered by Blogger.