இந்து தீவிரவாதம், குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது, மனம் பதறுகிறது - கமல்ஹாசன்
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தனது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்நிலையில், இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தன் புகைப்படத்தை கத்தியால் கிழிக்கும் சிறுவன் குறித்து பதிவிட்டிருப்பதாவது:
இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர்.
என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.
இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய களநிலவரங்களை சரியாக எடுத்துக்கூறியுள்ளீர்கள். அரசியலாக, அரசியலுக்காக மட்டும் இதனைப் பயன்படுத்தாமல் உளத்தூய்மையுடன் இதற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் அரசியலிலும் தனியிடத்தை ஏற்படுத்தலாம்.
ReplyDeleteKamalhassan should be arrrested. where you were in politics since your movies are success. Bow you can't act in old age now and want enter in the politics.
ReplyDeleteFirst you can teach the good behaviour to your two dayghters then come to politics
படங்களில் காமடியாக வரும் வடிவேலுவை போன்று காக்கிசட்டையும் விலங்குமாக சென்று கமலை கைதுசெய்!
Deleteஐயோ! இவனுக்கு பைத்தியம் முற்றிவிட்டதே! குடும்பமும் கைவிட்டுவிட்டதோ தெரியவில்லை. கல்லடிபட்டே சாகப்போறான்.
கமல் மீது எனக்கு அதிக ஈடுபாடில்லைதான்! கலைஞனைத்தாண்டி பிறப்பால் அவன் ஒரு காவி!
ReplyDeleteஎந்த சந்தையில் வின் கால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதை நனகறிந்தவன்!
ராஜ ராஜ சோலன் கீலத்திலிருந்தே காவியை கைகழுவிய தமிழ்நாட்டு அரசியல் ஈழத்தமிழ் அரசியலுக்கு நேரெதிர்! ஈழத்தில் காவி புரையோடிய சோனக, பேரினப்பூச்சாண்டிதான் அரசியல் உரம்! தமிழ் நாட்டில் வர்ணாச்சிர சாதிய அரசியல் பாச்சா ஒரு நாளும் பழுக்காது என்பதை கமலஹாசன் நனகறிந்தபடியால் ஓய்வூதி அரசியலாக நடிக்கிறான் என்பதுமான் உண்மை! ஆனாலும் அவனது கருத்து 200% உண்மையே