Header Ads



உள்ளுராட்சி தேர்தலுக்கு ஆப்பு - நீதிமன்றம் இன்று உத்தரவு

உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடங்கிய வரத்தமானி அறிவித்தல் செயற்பாட்டை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று -22- இடைக்கால தடையுத்தரவொன்றை வௌியிட்டுள்ளது.

கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, ஹாலிஎல ஆகிய உள்ளுராச்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பேர் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு இன்று மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதி குழு முன்னிலையில் ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் மாதம் 4ம் திகதி வரை அமுலில் இருக்கும்.

No comments

Powered by Blogger.