Header Ads



ஹெம்மாதகமயில் இப்படியும் நடந்தது


பதற்றத்துடன் இருந்தமையினால் வெற்றிலையுடன் இருபது ரூபாய் தாள்கள் இரண்டினை நபர் ஒருவர் மென்று சாப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஹெம்மாதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹெம்மாதகம நகரத்தின் பிரபல கடை ஒன்றில் வெற்றிலை கொள்வனவு செய்த நபருக்கு கடை உரிமையாளரினால் மீதிப்பணமாக 20 ரூபாய் தாள்கள் இரண்டு வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது வெற்றிலையை வாயில் போட்டு கொண்ட அந்த நபர் உடனடியாக கடையை விட்டு வெளியேறியுள்ளார்.

திடீரென மீதிப்பணம் பெற்றுக் கொள்ளவில்லை என நினைத்த நபர் மீண்டும் கடைக்கு சென்று உரிமையாளரிடம் மீதிப்பணத்தை கோரியுள்ளார்.

தான் மீதிப்பணத்தை வழங்கி விட்டதாக உரிமையாளர் கோரிய போதிலும் குறித்த நபர் அதனை ஏற்றுக் கொள்ளாமையினால் இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

சூடான வாய்த்தகராறு முற்றியமையினால் குறித்த நபர் கூச்சலிடும் போது, அவரது வாயில் இருந்த வெற்றிலை கீழே விழுந்துள்ளது. இதன்போது சிறிது சிறிதாக மென்ற 20 ரூபாய் தாள்கள் காணப்பட்டுள்ளன.

மீண்டும் அந்த பணத்தை பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.