Header Ads



இலங்கையுடனான உறவு மேம்படுத்தப்படும் - UAE


இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்ள ஐக்கிய அரவு அமீரகம் முணைப்புடன் இருப்பதாக வலைகுடா நாடுகளுக்கான வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான அமைச்சர் செய்க் அப்துல்லா பின் செய்ட் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் நேற்று சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசியாவிற்கான விஜயத்தின் ஒரு அங்கமாக செய்க் அப்துல்லா பின் செய்ட் அல் நஹ்யான் நேற்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட பரஸ்பர தொடர்பை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.