Header Ads



முஸ்லிம்களின் கோரிக்­கையை, தமிழர்கள் ஏற்க வேண்டும் - சம்­பந்தன்

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே வெளி­வந்­துள்­ளது. இதில் மாற்­றங்கள் நிகழ்­வ­தற்கு இட­முண்டு. ஆகவே இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்த  எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தமிழ் மக்கள் ஏற்­காத எந்த விட­யத்­தி­னையும் தாமும் ஏற்­கப்­போ­வ­தில்லை எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார்.

அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது இனம்­சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்­பி­ன­ருக்கும் அவ­சி­ய­மா­னது எனக்­கு­றிப்­பிட்ட சம்­பந்தன்  வட­கி­ழக்கு இணைப்பு விட­யத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­கின்­ற­போது முஸ்­லிம்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொண்டு தமிழ் பேசும் மக்­க­ளாக வாக்­க­ளிக்க வேண்டும் என்றும் கோரி­யுள்ளார்.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வவு­னி­யாவில் உள்ள வன்னி இன் விடு­தியில் முற்­பகல் 10 மணிக்கு ஆரம்­ப­மா­னது. இக் கூட்­டத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சிரேஷ்ட தலை­வரும் எதிர்க்கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் விசேட உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாட்டில் அர­சி­ய­ல­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­ட­போது தமிழ் மக்கள் அதில் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை. தமிழ் மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே அர­சி­ய­ல­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான நிலையில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்­பெற்­ற­போது இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்­சியை அமைத்­துள்­ளன. இது­வொரு நல்ல சந்­தர்ப்­ப­மாகும். இவ்­வா­றான சந்­தர்ப்பம் கடந்த காலத்தில் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. அந்த சந்­தர்ப்­பத்­தினை நாம் நழுவவிடக்­கூ­டாது. சரி­யாக பயன்­ப­டுத்த வேண்டும். அதற்­கா­கவே நாம் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­க­ளுக்­கான செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்றோம்.

 நாட்டின் உயர் நீதி­மன்­றத்தில் எமது கட்­சியின் கொள்­கை­களை காரணம் காட்டி வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது. சேனா­தி­ராஜா அப்­போது செய­லா­ள­ராக இருந்­த­மையால் அவ­ருக்கு எதி­ராக வழக்கை தொடர்ந்­தார்கள். அதில் தமி­ழ­ரசுக் கட்­சியின் சமஷ்டிக் கொள்கை நாட்டை பிரிப்­ப­தாக உள்­ளது. ஆகவே அதனை தடை­செய்ய வேண்டும் என்று  அறி­விக்க வேண்டும் என்று கூறி­னார்கள். 

ஆனால் அந்த வழக்கில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான கன­க­ஈஸ்­வரன், சுமந்­திரன் ஆகியோர் சர்­வ­தே­ச­ நா­டு­களில் உள்ள சமஷ்டி வடி­வங்­களை உதா­ர­ண­மாகக் கூறி­னார்கள். பல்­வேறு வாதங்­களை முன்­வைத்­தார்கள். அதன் பிரகாரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்று நீதி­ப­திகள் தீர்ப்பை அறி­வித்­தார்கள். இந்த தீர்ப்­பினை அறி­வித்­த­வர்கள் சிங்­கள நீதி­ப­திகள் என்­பதை கவ­னத்தில் கொள்ள வேண்டும். அதே­நேரம் நீதித்­து­றையின் சுயா­தீனம் தொடர்­பா­கவும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். 

தற்­போது வெளி­வந்­துள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் வார்த்­தை­களை மைய­மாக வைத்து விமர்­சனம் செய்­கின்­றார்கள். ஒரு­மித்த நாடு என்­பது நாடு ஒரு­மித்து, பிள­வு­ப­டா­தி­ருப்­ப­தையே குறிக்­கின்­றது. அது ஆட்சி முறை­மையைக் குறிக்­க­வில்லை. அதனை புரிந்து கொள்ள வேண்டும். எமது விட­யங்­களை நாமே கையா­ளக்­கூ­டிய வகையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்­ப­தையே கோரு­கின்றோம். வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீளப்­பெ­றப்­பட்டு விடக்­கூ­டாது என்­பதில் உறு­தி­யாக இருக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டு­மாகும்.  அந்த வகையில் இடைக்­கால அறிக்­கையில் அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பாக விட­யங்கள் முன்­னேற்­ற­க­ர­மாக காணப்­ப­டு­கின்­றன.  

அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்­பது தனியே தமிழ் மக்கள் சார்ந்­த­வொரு விடயம் அல்ல. அதி­கா­ரங்­களை சிங்­கள மக்கள் உள்­ளிட்ட அனை­வரும் பயன்­ப­டுத்த வேண்டும். அந்த வகையில் மத்­திய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும். ஆகவே அதி­கா­ரப்­ப­கிர்வு என்ற விட­யத்­தினை இன­ரீ­தி­யாக பார்க்க கூடாது. அது நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் உரி­யதா­ன­தொன்­றா­கவே பார்க்க வேண்டும். இந்த மன­நிலை அனைத்து மக்கள் தரப்­பி­ன­ரி­டத்­திலும் ஏற்­பட வேண்டும். 

அடுத்­த­தாக பௌத்த மதத்­திற்கு முத­லிடம் வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக கூறு­கின்­றார்கள். பெளத்த மதத்­திற்கு முத­லிடம் வழங்­கப்­பட்­டுள்­ள­மைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை என்று விமர்சிக்­கின்­றார்கள். இடைக்­கால அறிக்­கையில் பௌத்த மதத்­திற்கு முத­லிடம் வழங்­கப்­பட்­டுள்ள அதே­நேரம் ஏனைய மதங்­க­ளுக்கும் சமத்­துவம் அளிக்­கப்­பட வேண்டும் என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனால் ஏனைய மதங்­க­ளுக்­கு­மான உரிய இடம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்­த­தாக வடக்கு, கிழக்கு விடயம். இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள் இணைந்து இருந்­தன. தொடர்ச்­சி­யாக 18 ஆண்­டு­க­ளாக இந்த மாகா­ணங்கள் இணைந்தே செயற்­பட்­டன. இருப்­பினும் நீதி­மன்­றத்தின் தீர்ப்பின் பிர­காரம் 18 ஆண்­டு­க­ளுக்கு பின்னர் இந்த இரண்டு மாகா­ணங்­களும் தனித்­த­னி­யாக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை வடக்கு, கிழக்கு தொடர்­பாக கருத்து வெளி­யி­டு­ப­வர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு இணைக்­கப்­ப­டு­வ­தற்கு வடக்கு, கிழக்கில் ஒரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும். அவ்­வாறு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­கின்ற போது சகோ­தர முஸ்லிம் சமூ­கத்­தினால் முன்­வைக்­கப்­படும் நியா­ய­மான கோரிக்­கையை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அது கரை­யோர மாவட்­ட­மாக இருக்­கலாம். அல்­லது நிலத்­தொ­டர்­பற்ற தனி­ய­ல­காக  இருக்­கலாம். அவர்­களின்   நியா­ய­மான கோரிக்­கையை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்ளும் அதே­நேரம் இரு­ ச­மூ­கங்­களும் தமிழ் பேசும் சமூகங்­க­ளாக ஒன்­று­பட்டு வாக்­க­ளிக்கும் கரு­மத்தில் பங்­கேற்க வேண்டும். தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்றே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பான விவா­தங்கள் அர­சி­ய­ல­மைப்பு சபை­யிலே நடை­பெற்று வரு­கின்­றன. இதில் சில பல மாற்­றங்கள் ஏற்­ப­டலாம். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி வரை­புக்­காக இன்னும் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு இறுதி வரைபு செய்­யப்­பட்ட பின்னர் அந்த வரை­புடன் நாம் மக்­க­ளி­டத்தில் செல்வோம். மக்கள் அதனை ஏற்­க­வில்­லை­யென்றால் நாம் நிச்­ச­ய­மாக அதனை ஏற்­றுக்­கொள்ளமாட்டோம். 

ஆகவே தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை குலைத்துவிடக்கூடாது. குழப்பி விடக்கூடாது. நாம் இறுதிவரையில் முயற்சிக்க வேண்டும். இந்த நல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கருமங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

இடைக்­கால அறிக்கை தொடர்­பாக சிங்­கள மக்கள் மத்­தியில் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தவ­றான பரப்­பு­ரை­களைச் செய்­கின்­றார்கள். எமது தரப்பில் உள்­ள­வர்­களில் சிலர் இடைக்­கால அறிக்கை தொடர்பில் விளங்­கியும் விதண்­டா­வாதம் செய்­கின்­றார்கள். அதே­போன்று இன்னும் சிலர் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக விளங்­காது விதண்­டா­வாதம் செய்­கின்­றார்கள். இந்த சந்­தர்ப்­பத்­தினை குழப்­பாது அனை­வரும் ஒன்­றாக இக்­க­ரு­மங்­களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

3 comments:

  1. Mr Sampanthan,

    அடுத்த தேர்தலில், நீங்கள் படுதோல்வி அடைவீர்கள் என்று தமிழர்கள் சொல்கிறார்கள்.

    சுமந்திரனின் கதையும் முடிய போகுது.

    புதிய அரசிலமைப்பு, இணைப்புக் கோஷங்கள் எல்லாம் வெறும் சுத்து மாத்து.



    ReplyDelete
  2. சம்பந்தர் ஐயா!
    அடிப்படையில் நீங்கள் கிழக்கத்தியன். வடக்கத்தியான் உங்களை அங்கீகரிக்கமாட்டார்கள் என்பதை விக்கி ஐயாவின் போக்கு உங்களை உசாரடையச் செய்திருக்கும். அது இவ்வாறிருக்க அதிகாரப் பகிர்வு என்பது இனம்சார்ந்தது அல்ல என்றும் பின்னர் தமிழர்கள் தமது தீர்வை பெற்றுக்கொள்ளும் வரை குழப்பாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதும் முஸ்லிம்களின் கோரிக்கையையும் கருத்தில் எடுக்க வேண்டும் என்றும் தொடர்பு இல்லாமல் கருத்துரைப்பது தங்களின் உள்ளக்கிடக்கையை காட்டுவதாகவும் இருக்கிறது.
    எனவே எங்களைக்காட்டி நீங்கள் தீர்வைப் பெற வேண்டுமென்றால் கிழக்கை வடக்குடன் இணைக்கும் கதையை விட்டுவிடுங்கள். இல்லையென்றால் அரோ..............

    ReplyDelete

Powered by Blogger.