Header Ads



ஜிந்தோட்ட வன்முறை, நாம் தொடர்பில்லை - பொதுபல சேனா

காலி கிந்­தொட்ட பிர­தே­சத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற இனக்­க­ல­வரம் தொடர்பில் பொது­பலசேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேர­ரினால் அறிக்­கைகள் எதுவும் வெளி­யி­டப்­ப­டாத நிலையில், அவரின் பெயரில் அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் த­ளங்­க­ளூ­டாக அவ­ரு­டைய பெயரைப் பயன்­ப­டுத்தி ஊடக பிர­சா­ரங்கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­கவும் பொது பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

சம்­பவம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து இக் கல­வ­ரத்தில் சொத்­துக்­களை இழந்­த­வர்­க­ளுக்கும் விஷே­ட­மாக  காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கும் உரிய நஷ்­ட­ஈட்­டினை ப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தோடு சமூ­கத்தில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்த அனை­வரும் உடன்­பட வேண்டும் என சம்­பவ இடத்­துக்கு  விஜயம் செய்த ஞான­சார தேரர் குறிப்­பிட்­டுள்ளார்.

கின்­தொட்ட பிர­தே­சத்தில் ஏற்­பட்ட வாகன விபத்தில் சிங்­கள இனத்­த­வ­ருக்கும் முஸ்லிம் இனத்­த­வ­ருக்கும் இடம்­பெற்ற பிரச்­சி­னையே இவ்­வாறு இனக்­க­ல­வ­ர­மாக தோற்றம் பெற்­றுள்­ளது இப்­பி­ர­தே­சத்தில் ஏற்­பட்ட விபத்து தொடர்பில் முறை­யான விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு நாம் கேட்டுக் கொள்­கின்றோம். நாட்டில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இது தொடர்­பான பிரச்­சி­னைகள் ஏற்­படும் பிர­தே­சங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்­தி­யுள்ளோம்.

இவ்வாறான ஆபத்தை தடுப்பதற்காகவும் எதிர்வரும் வருடங்களில் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதற்காகவும் தமிழ், இஸ்லாம் மற்றும் பௌத்த இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்  

1 comment:

  1. BBS and the so called Buddhist Monk and our Asath Sally's friend Gnanasera.....has done enough damaged to Islam and Muslims in Sri Lanka.Now he is pretending to be another Mr.Clean Guy...by these gimmicks.....pls be vigilant....never ever trust the venomous serpents....

    ReplyDelete

Powered by Blogger.