Header Ads



மகிந்த தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையாமால் விலகி, பரந்த கூட்டணியாக போட்டியிட மகிந்த அணி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் சுதந்திர கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என மகிந்த அணி முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும் அந்த அறிவிப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் இருந்து இதுநாள் வரையில் எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்தநிலையிலேயே எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சியுடன் இணையாமல், பிரத்தியேக கூட்டணியாக போட்டியிட தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. beginning the end of yahapalanaya.

    ReplyDelete
  2. மஹிந்தவின் கட்சி, தேர்தலில் வெற்றி பெறும்போது, தேவையற்ற அரசிலமைப்பும் தானாக மறைந்து விடும்.

    ReplyDelete
  3. Still 3years remain to yahapalana.
    God will bring good governce.
    But srilankan politicians hopeless people.

    ReplyDelete

Powered by Blogger.