தேர்தல் பின்னுக்குப்போக, ஜே.வி.பி.யும் காரணம்
தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவோம் என்பதை உணர்ந்தே அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டு வருகின்றது. அரசாங்கம் முன்னெடுக்கும் சதியில் ஜே.வி.பி.யும் கூட்டணியினர் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றபோது கட்சியின் உபதலைவர் ஜயந்த சமரவீர எம்.பி இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ரணில் – -மைத்திரி அரசாங்கம் கூட்டணி அமைத்து இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளன. இந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள், குற்றங்கள் என அனைத்தையும் மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். அரசாங்கம் ஏதேனும் ஒரு தேர்தலை நடத்தினாலும் கூட அதில் படுதோல்வியை சந்திக்க நேரிடும். மக்கள் இன்று அரசாங்கத்தை நிராகரித்து வருகின்றனர். ஆகவேதான் மக்களின் நிலைப்பாட்டினை அறிந்துகொண்டு அரசாங்கம் தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டு வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணி இன்று தாம் நியாயமாக போராடுவதாகவும், தமது போராட்டத்தில் பொது எதிரணியை இணைந்துகொண்டு போராட வருமாறும் அழைப்பு விடுக்கின்றனர். ஆனால் உள்ளூராட்சித் தேர்தலை பிற்போடவும் மாகாணசபை தேர்தல் பிற்போடவும் மக்கள் விடுதலை முன்னணியே காரணமாகும்.
குறிப்பாக மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் பிற்போட மக்கள் விடுதலை முன்னணியே காரணமாகும். பெண்களின் பிரதிநிதித்துவம் என்ற கதையை கூறிக்கொண்டு தேர்தலை பிற்போட அரசாங்கம் திட்டம் தீட்டியபோது அவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் அரசாங்கம் பெரும்பான்மையாகப் பெற்றது. அப்போது மக் கள் விடுதலை முன்னணி வாக்களிக்காது நிராகரித்திருந்தால் இன்று மாகாணசபைகள் தேர்தல் இடம்பெற்றிருக்க வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவே அவ்வாறு செய்ததாக கூறுகின்றனர், ஆனால் இப்போது உள்ளூராட்சி சபைத் தேர்த லையும் தள்ளிப்போடும் சூழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன என்றார்.
Post a Comment