Header Ads



ஜனாதிபதியின் மகளின் கையொப்பத்தை, தவறாக பயன்படுத்தியவர்கள் கைது


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பத்தை இட்டு அதை தவறாக பயன்படுத்திய இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பத்தை இட்டு, உதவி கோரி வங்கியொன்றுக்கு கடிதமொன்றை அனுப்பி, போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரையும் அவருடைய தாயாரையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

இவர்களை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.