Header Ads



ஜிந்தோட்ட வன்முறையில் எவரும் உயிரிழக்கவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்

காலி-ஜின்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சம்பவம் தொடர்பில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என அமைச்சர் வஜிர அபேவர்தன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று இரவு(18) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கு அரசாங்கம் நட்டஈட்டடை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தினால் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.