Header Ads



பிஸ்கட் கம்பனிகளினால், விழுங்கப்படும் தேங்காய்கள்

நாட்டில் பிஸ்கட் வகை­களை உற்­பத்தி செய்யும் நிறு­வ­னங்கள் பாரி­யளவில்  தேங்­காய்­களை கொள்­வ­னவு செய்­வதே நாட்டில் தேங்­காய் பற்­றாக்­குறை நிலவ பிர­தான காரணம் என தெங்கு உற் பத்­தி­யா­ளர்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

பாரிய நிறு­வ­னங்­களால் உற்­பத்தி செய்­யப்­படும் உட­னடி தேங்காய் பால்­மாவை பாவ­னையா­ளர்கள் கொள்­வ­னவு செய்­ய­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். பாவ­னைக்­கான தெங்கு  நாட்டில் உற்­பத்தி செய்­யப்­ப­டினும், அண்­மைக்­கா­ல­மாக திறந்த பொரு­ள­ா தார கொள்­கை­யின் கீழ் ஆரம்­பிக்­கப்­பட்ட நிறைய பிஸ்கட் தொழிற்­சா­லைகள், பாரி­ய­ளவில் தேங்­காய்­களை கொள்­வ­னவு செய்­கின்­ற­மையே நாட்டில் தேங்காய் பற்­றாக்­குறை நிலவக்காரணம் எனவும் குறிப்பிடுகின்றனர். 

இதேவேளை, தேசிய தெங்கு உற்­பத்தி சபையின் ஊடாக நகரும் லொறி மூல­ம் தேங்­காய் ஒன்று 65 ரூபா­வுக்கு விற்­பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.