உயிரிழந்த யாசகரின் பையிலிருந்து 80,000 ரூபா
பண்டாரகம, மொரன்துடுவ நுபே சந்தியில் உயிரிழந்த யாசகர் ஒருவரின் சட்டைப் பையிலிருந்து 80,000 ரூபாவை கண்டெடுத்ததாக மொரன்துடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி நபர் சில காலமாக மொரன்துடுவ பிரதேசவாசிகளிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்த யாசகர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாதென பிரதேசவாசிகள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெல்பொல என்ற பெயரில் இந்தநபர் நடமாடி வந்துள்ளார். இந்த யாசகரின் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment