Header Ads



இந்தக் குழந்தையை காப்பாற்ற 80 இலட்சம் தேவை...!

கடுமையான கல்லீரல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ள பெண் குழந்தையொன்று தொடர்பில் பஸ்யால பிரதேசத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

ஒரு வயதுடைய இந்த குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகமை போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சனுதி டிமாஷா என்ற இந்த குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை இந்தியாவில் இடம்பெறவுள்ள நிலையில் , இதற்காக 80 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குழந்தைக்கு கல்லீரல் நோய் மட்டுமின்றி ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் நோயும் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் , குடும்பத்தின் முதல் குழந்தையான சனுதியை எப்படியாவது குணமாக்க அவர்களின் பெற்றோர் போராடிவருகின்றனர்.

No comments

Powered by Blogger.