Header Ads



பலாங்கொடை கற்குகையிலிருந்து 6,300 வருட இரத்தக்கறையுடன கல் கண்டுபிடிப்பு


பலாங்­கொடை – வெலி­கே­பொல, இலுக்­கும்­புர மற்றும் பனான கிராமப் பகு­தி­களில் கற்­குகை ஒன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வு­களின் போது சுமார் 6300 வரு­டங்கள் பழைமை வாய்ந்த இரத்தக் கறை தோய்ந்த கல் ஒன்று தொல்­பொ­ரு­ளி­ய­லா­ளர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தே­ச­வா­சி­களால் லுணு­ப­கல்லே என அறி­யப்­படும் இந்த கற்­கு­கையில் 2015 ஆம் ஆண்டு களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட பேரா­சி­ரியர் ராஜ் சோம­தாஸ உள்­ளிட்ட குழு­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்ட தொல்­லியல் அகழ்­வு­களின் போதே இந்த இரத்­தக்­கறை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

உல­கி­லேயே இவ்­வா­றான அதி தொன்­மை­வாய்ந்த இரத்தக் கறைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள சந்­தர்ப்­பங்கள் ஆயி­ரத்­துக்கும் குறை­வா­கவே பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் புரா­தன மனித நாக­ரிகம் தொடர்­பான வர­லாற்றை தேடிச் செல்­வ­தற்கு இவ்­வா­றான தட­யப்­பொ­ருட்கள் முக்­கி­ய­மான சாட்­சி­க­ளாக அமை­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுமார் 6300 ஆண்­டுகள் பழை­மை­யான இந்த இரத்­தக்­கறை தோய்ந்த கல் மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக ராகமை மருத்­துவ பீடத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட பேரா­சி­ரியர் ராஜ் சோம­தாஸ தெரி­விக்­கை­யில், “எமக்கு இந்தக் கல் 2015 ஆம் ஆண்டில் கிடைத்­தது. இது வர­லாற்­றுக்கு முந்­தைய காலப்­ப­கு­திக்கு உரித்­தா­ன­தாகும். இந்தக் கல்லில் இருந்த கறை இரத்தக் கறை­யாக இருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் நான் அதனை பொரளை வைத்­திய ஆராய்ச்சி நிறு­வ­னத்தின் மூல­மாக விஞ்­ஞான ரீதி­யாக பரி­சோ­தனை மேற்­கொண்டேன். அது தொடர்பில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட இலத்­தி­ர­னியல் நுண்­ணணு பொறி­மு­றையின் மூலம் பெற்­றுக்­கொண்ட புகைப்­ப­டங்­களின் மூலம் அது மனி­தனின் இரத்தம் என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

வெப்­ப­மண்­டல உலர் வலய கற்­கு­கை­யினுள் இந்த இரத்­தக்­கறை காணப்­பட்­ட­தனால் மிக நீண்­ட­கா­ல­மாக இது பாது­காப்­பாக இருந்­துள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது. உல­கி­லேயே இவ்­வா­றான இரத்தக்கறைகள் கண்டுபிடிக்கப் பட்ட சம்பவங்கள் மிக சொற்ப அளவிலேயே பதிவாகியுள்ளன. இவ்வாறான இரத்தக்கறை எந்தக் காலப்பகுதியை சேர்ந்தது என கண்டறிவதற்கு உலகளாவிய ரீதியில் உயர் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்டுள்ளன என்றார்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.