Header Ads



கல்முனையில் 600 பொலிஸாரை, கொலைசெய்த புலிகளை கைதுசெய் - மேர்வின் சில்வா

27 ஆண்டுகளுக்கு முன்னதாக கல்முனையில் 600 பொலிஸ் உத்தியோகத்தர்களை படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை கைது செய்யுமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நிராயுதபாணிகளான பொலிஸ் உத்தியோகத்தர்களை படுகொலை செய்தமை தொடர்பில் இதுவரையில் உள்நாட்டு அல்லது சர்வதேச ரீதியில் விசாரணைகள் நடத்தப்படவில்லை.

எனவே இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி சட்டத்தை அமுல்படுத்தி உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டும்.

இந்த கொலையுடன் தொடர்புடைய புலிகளின் கிழக்குத் தளபதிகள் இன்னமும் இருக்கின்றார்கள்.

அவ்வாறான தலைவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

புலிகளிடம் சரணடையுமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அப்போது பணிப்புரை விடுத்த தரப்பினர் தொடர்பிலும் விசாரணை நடத்த தண்டனை விதிக்கப்பட வேண்டுமென மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. அருமை. முள்ளிவாய்க்கால் பற்றி கூச்சல் போடுபவர்கள் புலி பயங்கரவாதிகளின் அப்பாவி பொது மக்கள் மீதான கொடூர தற்கொலை குண்டு தாக்குதல்கள் பற்றி மூச்சு விடுவதில்லை

    ReplyDelete
  2. உண்மையில் நியாயமான கோரிக்கை.

    ReplyDelete
  3. உண்மையில் நியாயமான கோரிக்கை.

    ReplyDelete
  4. Hello Mervin,

    You can start arresting from Karuna.

    ReplyDelete
  5. Tamil terrorist Karuna ordered to kill the 600 policemen.

    He should be behind bars.

    ReplyDelete

Powered by Blogger.