Header Ads



சவுதியில் 50 மில்லியன் ரூபா கொள்ளை - 8 இலங்கையர்களுக்கு சிறை

சவுதி அரேபியாவில் 50 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறைத் தண்டனையை சவுதி அரேபிய நீதிமன்றம் விதித்துள்ளது.

சவுதி அரேபியாவில் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றிய 6 இலங்கையர்களுக்கும் சுத்தப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்களுக்குமே இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வேன் ரக வாகனம் ஒன்றில் பணம் கொண்டு சென்ற போதே, அவர்கள் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய 6 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு 3 வருட சிறை தண்டனையும் சுத்தப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு ஒரு வருட கால சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களது தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் சவுதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. same thing happened in the UAE too. is this the same or not ?

    ReplyDelete

Powered by Blogger.