சவுதியில் 50 மில்லியன் ரூபா கொள்ளை - 8 இலங்கையர்களுக்கு சிறை
சவுதி அரேபியாவில் 50 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறைத் தண்டனையை சவுதி அரேபிய நீதிமன்றம் விதித்துள்ளது.
சவுதி அரேபியாவில் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றிய 6 இலங்கையர்களுக்கும் சுத்தப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்களுக்குமே இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வேன் ரக வாகனம் ஒன்றில் பணம் கொண்டு சென்ற போதே, அவர்கள் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சந்தேகத்துக்குரிய 6 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு 3 வருட சிறை தண்டனையும் சுத்தப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு ஒரு வருட கால சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களது தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் சவுதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
same thing happened in the UAE too. is this the same or not ?
ReplyDelete