Header Ads



கல்முனை 4 ஆக பிரியுமா..? இன்று தீர்மானம்


கல்முனையை 4 ஆக பிரிப்பதா அல்லது கல்முனையிலிருந்து சாய்ந்தமருதுவை மாத்திரம் பிரிப்பதா என முக்கிய தீர்மானம் இன்று வெள்ளிக்கிழமை, 17 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் செயலாளர்கள், அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் பங்கேற்கும் கூட்டமென்று இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இதன்போதே மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படலாமென ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு ஜனாதிபதியுடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.