Header Ads



வீதியில் கண்­டெ­டுத்த 4 இலட்­சத்தை, உரி­ய­வரிடம் ஒப்­ப­டைத்­த­ சாரதி - குவிகிறது பாராட்டு


வீதியில் கண்­டெ­டுத்த நான்கு இலட்­சத்து 11 ஆயிரம் ரூபா  பணத்தை முச்­சக்­கர வண்டி சார­தி­யான விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் ( வயது 31) கண்டி பொலி­ஸாரின் ஊடாக உரி­ய­வரை  கண்­டு­பி­டித்து ஒப்­ப­டைத்­த­ அவரின் நேர்­மை­யான செய­லை அனை­வரும் பாராட்­டு­கின்­றனர்.

கண்டி நகரில் முச்­சக்­கர வண்டி ஓட்டும் இளை­ஞ­ரான விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் தமது முச்­சக்­கர வண்­டியை செலுத்திக் கொண்டு வந்து அதனை கண்டி நகரில் அமைந்­துள்ள ஸ்ரீ  விக்­கி­ரம ராஜ­சிங்க  மாவத்தை வீதியில்  நிறுத்த முற்­பட்­ட­போது அநா­த­ர­வாக கிடந்த  பொதி­யொன்றை கண்­டெ­டுத்­துள்ளார்.

அதனை சந்­தே­கத்தில் அவர் பிரித்து  பார்த்­த­போது அதனுள் நான்கு இலட்­சத்து 11 ஆயி­ரம் ரூபா பணம் இருப்­பதை கண்டு அவர் அதனை உரி­ய­வ­ரிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்ற திட­சங்­கற்­பத்­துடன் கண்டி பொலி­ஸ் தலை­மை­ய­கத்­துக்குச் சென்று  பொலிஸ் உய­ர­தி­கா­ரி­களிடம் பணத்தை கண்­டெ­டுத்த விப­ரத்தை கூறி  அதன் உரி­மை­யா­ளரை கண்டுபிடித்து ஒப்­ப­டைக்க தான்  விரும்­பு­வ­தாக தெரி­வித்து பணத்தை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்ளார்.

பொலிஸார் பெரும் முயற்­சி­களை மேற்­கொண்டு  உரி­ய­வரை கண்­டு­பி­டித்­துள்­ளனர். அவர் காலி ஹினி­தும பிர­தே­சத்தை சேர்ந்த பிர­பல வர்த்­தகர் ஒரு­வ­ராவார்.இவர் கடந்த  சில தினங்­க­ளுக்கு  முன்பு தமது  பிறந்த தினத்தை முன்­னிட்டு ஸ்ரீ தலதா மாளி­கைக்கு விஜயம் செய்து பூஜை வழி­பா­டு­களில் கலந்து கொள்ள வருகை தந்­துள்ளார். தனது வழி­பாடு நிறை­வ­டைந்­ததும் கண்­டி­ விக்­கி­ர­ம­சிங்க மாவத்தை வாகன தரிப்­பி­டத்தில் தனது காரை நிறுத்­தி­விட்டு முச்­சக்­கர சாரதி ஒரு­வ­ரிடம் இரவு வேளை தங்­கு­வ­தற்­காக  சிறந்த விடு­தி­களை கேட்­டுள்ளார்.

விப­ரங்­களை அறிந்து கொண்ட வர்த்­தகர் கண்டி வாவிக்­கரை அருகில் உள்ள விடுதி ஒன்­றுக்குச் சென்று அங்கு தனது காரை நிறுத்­தி­விட்டு தனது பணப்­பையை தேடி­யுள்ளார்.ஆனால் அது இருக்­க­வில்லை. அதிர்ச்­சி­ய­டைந்த அவர் பகல் வரும் வழியில் நிட்­டம்­பு­வயில் பகல் உண­வுக்காக விடுதி ஒன்­றிற்கு சென்­றி­ருந்தார்.அங்­குதான் பணப்­பையை தவற விட்­டி­ருக்­கலாம் என கருதி அங்கு விரைந்து சென்று அங்கிருந்த சீ.சீ.டி.வி  பதிவுகளை பார்த்­த­போது வியா­பாரி பணப்­பை­யுடன் அங்­கி­ருந்து வெளி­யே­று­வது அதில்  புலப்­பட்­டுள்­ளது.

இதனால் அப்­பணம் தமக்கு மீள கிடைக்­கப்­போ­வ­தில்லை என்று  கருதி ஹினி­து­மைக்கு திரும்­பி­விட்டார். விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் கண்­டெ­டுத்த பணப்பை பொதியில் உரி­மை­யா­ளரின் தேசிய அடை­யாள அட்­டையும் இருந்­துள்­ளது.

இத­னை­க் கொண்டு பொலிஸார் உரி­ய­வரை தொடர்பு கொண்டு கண்­டிக்கு  வர­வ­ழைத்து  விசா­ரணை செய்த பின்னர்  பொலிஸ் நிலைய தலைமை பொறுப்­ப­தி­காரி உரி­ய­ பணத்தை  விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் மூலம் அவரிடம் கைய­ளிக்க செய்­தனர்.

முச்­சக்­கர வண்டி சார­தி­யான  விஸ்­வ­நா­தனின் சிறந்த நேர்­மை­யான  செய்­கையை பொலிஸ் அதிகாரிகளும் குறிப்பிட்ட வர்த்தகரும் பாராட்டியதோடு  உரிமையாளரான  வர்த்தகர் அவரின் நேர்மைக்காக  ஒரு இலட்சம் ரூபா பணத்தை பரிசாக கொடுத்த போதும் அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார். இவரது இச்செயலை கண்டி மாநகரில் பலதரப்பட்டவர்களும் பாராட்டுகின் றனர்.

No comments

Powered by Blogger.