Header Ads



குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவனுக்கு 472 ஆண்டு சிறை

குழந்தைகளை கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, இணையதளத்தில் குழந்தைகளை விற்று வந்த  31 வயது குற்றவாளிக்கு 472 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில், மனிதர்களை கடத்தி விற்கும் குற்றவாளிகளிலேயே அதிகபட்சமாக தண்டனை விதிக்கப்பட்டது இந்த வழக்கில்தான்.

மனிதர்களைக் கடத்தி விற்பது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, கடத்துதல் என சுமார் 30 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட கொலரோடோவைச் சேர்ந்த பிரோக் ஃப்ராங்லின், தனது மீத வாழ்நாளை சிறையிலேயேதான் கழிக்க வேண்டும்.

400 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை விதித்திருப்பது, நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்தவே என்று கொலரடோ நீதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.