Header Ads



3 மீனவர்களின் சடலங்கள் மீட்பு, கடலில் சிக்கியவர்கள் மீட்க துரித நடவடிக்கை

நாட்டில் தற்போது நிலவுகின்ற மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலையால் அனர்த்தத்துக்குள்ளான மீனவர்கள் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அம்பலாங்கொடை மற்றும் தொடந்துடுவ பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் மூவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இம்மூவருடன் மீன்பிடிப் படகில் பயணித்த மற்றுமொரு மீனவர், கடலில் நீந்திவந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்று ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ள மீனவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில், கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, கடற்படைத் தலைமையகம் தெரிவிக்கின்றது.

No comments

Powered by Blogger.