Header Ads



அமெரிக்காவில் இலங்கைப் பெண் கொலை, சந்தேகநபர் 34 தடவைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்


அமெரிக்காவில் இலங்கைப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான டென்டீ மூர் என்ற இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மூர் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், வன்முறைகளுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாகவும் 34 தடவைகள் பொலிஸாரினால் மூர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் போது தம்மை குறித்த பெண் ஏமாற்றியதாகவும் அதற்காக அவரை கொலை செய்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமான கொண்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற கீதா ஹாவி நேற்று முன்தினம் நிவ்யோர்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கீதா தமது இலங்கை உறவினர் ஒருவரின் திருமண நிகழ்விற்காக இலங்கை வர திட்டமிட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.