தேசிய மீலாத் விழா 2017 - பாரம்பரிய இஸ்லாமிய ஆவணங்கள் உடனடியாக தேவை
தேசிய மீலாத் தின விழா இம்முறை யாழ் மாவட்டத்தில் 18.12.2017 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் இணைத்து செயற்படுத்தி வருகின்றது.
இவ்விழாவினைச் சிறப்பிக்கும் நோக்குடன் மேற் குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களும் இணைந்து கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்து வருகின்றன.
இக் கண்காட்சி தொடர்பில் இஸ்லாமிய பாரம்பரியங்களை வெளிப்படுத்தக்கூடிய ஆவணங்கள், பொருட்கள். மற்றும் முன்னைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட குர்ஆன் பிரதிகள், அரபு எழுத்தணிச் சித்திரங்கள் போன்ற காட்சிப்படுத்தப்படக்கூடிய பொருட்கள் தேவைப்படுகின்றன.
2017 டிசம்பர் 16,17ஆந் திகதிகளில் நடைபெறவுள்ள இக் கண்காட்சிக்கு ஒத்துழைப்பு தரக்கூடிய பாடசாலைகள், மாணவர்கள், தனி நபர்களிடமிருந்து ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.
தங்களால் எமக்கு தரப்பட்ட காட்சிப் பொருட்கள் கண்காட்சியின் பின்னர் திருப்பித் தரப்படும் என்பதையும் தெரிவிக்கின்றோம். தயவு செய்து இது தொடர்பில் மஹ்ரூப் A காதர் என்பவருடன் (0711454156) கையடக்க தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு டிசம்பர் 01ந் திகதிக்கு முன்னர் விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
Post a Comment