Header Ads



இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம் - இப்படியொன்று உருவாக 20 இலட்சம் வருடங்கள் தேவையாம்..!

இரத்தினபுரியில் விலை மதிப்பில்லாத இரத்தினகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்புமுல்ல ரில்லப பிரதேசத்தை சேர்ந்த எல்.எம்.கருணாவன்ஷ என்பவரிடம், விலை மதிப்பிட முடியாத இரத்தினகல் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தினகல்லில் அரண்மனை மற்றும் அரண்மைக்கு செல்லும் வீதி, நீர்க் குளம் ஒன்றும் தெளிவாக காட்சி அளிக்கிறது. இதன் நிறை 15 கிலோ கிராமாகும்.

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் இந்த இரத்தின கல் தனக்கு கிடைத்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினகல் கிடைத்தவுடன் வாழ்க்கை முழுமையாக மாற்றமடைந்ததாகவும், அதற்கு பூஜைகள் நடத்தி தன் உயிர் போன்று பாதுகாத்து வருவதாக கருணாவன்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 30 வருடங்களாக இரத்தினகல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றார். எனினும் இவ்வாறான கல் ஒன்றை தனது வாழ்நாளில் பார்த்ததில்லை என கருணாவன்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினகல்லை சோதனையிட்ட பல துறைசார் வர்த்தகர்கள், இது பல அற்புதங்கள் நிறைந்தது எனவும் இதன் பெறுமதி மதிப்பிட முடியாதவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான இரத்தினகல் ஒன்று உருவாக குறைந்தது 20 இலட்ச வருடங்கள் தேவைப்படும் விஞ்ஞான ரீதியான ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

விலை மதிப்பில்லா இரத்தினகல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்வுள்ளதாக கருணாவன்ஷ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.