Header Ads



1977 இல் 'தமிழ் பேசும் மக்­கள்' என்று முஸ்­லிம்­க­ளை­யும் இணைத்துக் கொண்டார்கள் - சம்பிக்க

தமிழ் தலைவர்கள் தனிநாட்டுக் கனவில் இருக்காமல் அரசுடன் இணைந்து நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய முன்வர வேண்டும் இவ்வாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மாகாணசபை முறைமையில் திருத்தங்கள் மேற்கொள்வதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்பதை நாம் நம்ப மாட்டோம்.

இலங்கையிலுள்ள தமிழர்களில் 45 சதவீதத்தினர் வடக்கில் இருக்கின்றனர். எஞ்சிய 55 சதவீதத்தினரும் வடக்குக்கு வெளியில் தான் இருக்கின்றனர்.

வடக்குக்கு அதிகாரம் வழங்குவதன் ஊடாக எப்படி தமிழ் மக்களின் பிரச்சினை தீரும்.

1977ஆம் ஆண்டு இவர்­கள் புதிய திட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­னார்­கள். தமிழ் பேசும் மக்­கள் என்று முஸ்­லிம்­க­ளை­யும் இணைத்துக் கொண்டார்கள்.

முஸ்­லிம்­களை இணைத்­துக் கொண்­டா­லும் வடக்­கில் தமிழ் பேசும் மக்­கள் 20 சத­வீ­தம்­ தான். எஞ்­சிய 80 சதவீதத்தின­ரும் வடக்­குக்கு வெளி­யில் ­தான் இருக்­கின்­ற­னர்.

இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டுக்கு அதி­கா­ரம் வழங்­கப்­பட்டுள்ளதா­கத் தெரி­விக்­கின்­ற­னர். இந்­தி­யா­வி­லுள்ள தமிழர்களின் 94 சத­வீ­தத்­தி­னர் தமிழ்­நாட்­டில் ­தான் இருக்­கின்­ற­னர். இலங்­கை­யில் அப்­ப­டி­யான நிலைமை இல்லை.

நாங்­கள் இரண்டு தீர்­மா­னங்­களை முன்­வைத்துள்ளோம். பிர­தேச சபை­க­ளுக்கு அதி­கா­ரம் வழங்­கப்­ப­ட­ வேண்­டும். வடக்­கில் இருக்­கும் தமிழ் முஸ்­லிம் சிங்­கள மக்­க­ளுக்­கும் நன்மை கிடைக்­கும்.

தெற்­கில் இருக்­கும் தமிழ் முஸ்லிம் சிங்­கள மக்­க­ளும் நன்மை கிடைக்­கும். அதற்கு நாங்­கள் எதிர்ப்பு தெரி­விக்­கப்­போ­வ­தில்லை.

சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் படித்த அர­சி­யல் தமிழ்த் தலை­வர்­க­ளால் அந்த நாட்­டுக்கு பெரிய சேவை வழங்­கப்­ப­டு­கின்­றது. எமது நாட்­டுக்­கும் அந்­தச் சேவை தேவை­யா­கும். தமிழ் மக்­க­ளுக்­கும் அந்­தச் சேவை தேவை­யாக இருக்­கின்­றது.

தமிழ் தலை­வர்­கள் தனி­நாட்­டுக் கன­வில் இருக்­கா­மல் அவர்­கள் நேர­டி­யாக அர­சு­டன் இணைந்­து­ கொண்டு அவர்களின் திற­மைகளை நாட்­டுக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும் வழங்க முன்­வ­ர ­வேண்­டும் என்­றார்.

2 comments:

  1. யாருடைய்யதாவது நாட்டுக்கு தமிழனின் திறமை..?!

    ReplyDelete
  2. ஒரு இனவாதியின் ஏற்றுக்கொள்ளகூடியதான கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.