நாய்கள் காணாமல் போன நிலையில், 10 அடி மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது
நாவலப்பிட்டிபொலிஸ் பிரிவுக்கு உகபட்ட வெலிகம்பொல கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்மை பிரதேசவாசிகள் பிடடித்துள்ளனர் .
மரக்கறி தோட்ட விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு மரத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு நேற்றுக் காலை சென்ற போதே மரத்தடியில் மலைப்பாம்பை கண்டுள்ளார்.
மலைபாம்பை கண்ட பிரதேச வாசிகள் முதலில் அச்சம் கொண்ட நிலையில் பின்னர் அதனை பிடித்துள்ளனர்.
அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் காணாமல் போன நிலையிலே இந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
Post a Comment