Header Ads



மஹிந்த கள­மி­றங்கி எமது வாக்­கு­களை சூறை­யா­டினால், நாம் தோற்­பது உறு­தி­ Unp க்கு வெற்றிகிட்டும்

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பழி­வாங்­கவே மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை அழிக்க நினைக்­கின்றார். கட்­சியை பிள­வு­ப­டுத்­தினால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாய்ப்­புகள் அதிகம் என்­பதை தெரி­யாத  குழந்­தையா மஹிந்த என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திசா­நா­யக்க கேள்வி எழுப்­பினார். 

கட்­சியின் தலைவர் சுக­யீனம்  அடையும் போது கட்­சியும் சுக­யீனம் அடைய முடி­யாது  எனவும் அவர் குறிப்­பிட்டார். மிகிந்­தலை பிர­தே­சத்தில் நேற்று  இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் பிள­வுகள் உள்­ளன. இதை கூறு­வதில்  வெட்­கப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை. விரும்­பியோ விரும்­பா­மலோ நாம் இரு தரப்­பாக செயற்­பட்டு வரு­கின்றோம். ஆனாலும் தனிப்­பட்ட முரண்­பா­டு­களை  கார­ண­மாக வைத்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்த ஒரு­போதும் முயற்­சிக்­கக்­கூ­டாது.  

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­வ­ருக்கு வய­தான கார­ணத்­தினால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் வய­தாக முடி­யாது. கட்­சியின் தலைவர் சுக­யீனம்  அடையும் போது கட்­சியும்  சுக­யீனம் அடைய முடி­யாது.  மஹிந்த ராஜபக் ஷ இப்­போது வேறு கட்­சி­யொன்றை உரு­வாக்­கி­யுள்ளார். அப்­ப­டி­யாயின் இன்று அவர்­க­ளுக்கு ஒரு கட்சி உள்­ளது என்­பது பொய்­யல்ல. பொது­ஜன பெர­முன என்ற பெயரில் தாமரை மலர் சின்­னத்தில் அக் கட்சி இயங்கி வரு­கின்­றது அதில் மஹிந்த ராஜபக் ஷவின் புகைப்­ப­டமும் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடை­யி­லான போட்­டியில் மஹிந்த ராஜபக் ஷ தனித்து கள­மி­றங்கி எமது வாக்­கு­களை சூறை­யா­டிக்­கொண்டால் எப்­ப­டியும் நாம் தேர்­தலில் தோற்­பது உறு­தி­யா­கி­விடும். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு முழு­மை­யான வாய்ப்­புகள் கிடைக்கும். ஆகவே மஹிந்த ராஜபக் ஷ பசில் ராஜபக் ஷ மூல­மாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சிலரை தன்­பக்கம் இணைத்தால் இறு­தியில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தோல்­வியை சந்­திக்கும் என்­பது மஹிந்த ராஜபக் ஷவிற்கு தெரி­யாத விடயம் அல்ல . அவ­ருக்கு கணக்கு தெரி­யாதா? அர­சியல் தெரி­யாத நபரா ? அவர் என்ன அர­சியல் தெரி­யாத குழந்­தைப்­பிள்­ளையா? அப்­படி இருந்தும் ஏன் மஹிந்த ராஜபக் ஷ இதனை செய்­கின்றார். 

மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது கோபம் இருக்­கலாம். தன்­னுடன் இருந்த செய­லாளர் தனக்கு போட்­டி­யாக கள­மி­றங்­கி­யது மட்­டு­மல்­லாது தேர்­தலில் தலைவர் தோற்று செய­லாளர் வெற்றி பெற்றார். இந்த வைராக்­கியம் அவ­ரிடம் இருக்­கலாம். அதற்­காக தன்­னுடன் இணைந்து செயற்­பட்ட நபர்­களை பழி­வாங்கும் எண்ணம் இருக்க முடி­யாது. ஆனால் அவர்­களை பழி­வாங்­கவே மஹிந்த ராஜபக் ஷ முயற்­சி­கின்றார். கட்­சியை பழி­வாங்­கினால் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பழி­வாங்­கு­வ­தாக கரு­து­கின்றார். இது நிகரானதா? அவ்வாறு செயற்பட்டால் அவருடைய கோபம் தீருமா?  ஆகவே மஹிந்த ராஜபக் ஷவே சிந்திக்க வேண்டும். யாருடன் இணைந்து செல்வது என்ற தீர்மானத்தை மஹிந்தவும் அவரது தரப்புமே முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.