பேராசிரியர் S ஸ்ரீகாந்தன் காலமானார் - முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்
கொழும்பு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா கற்கைநெறியின் தமிழ் பிரிவுக்கு பொறுப்பாகயிருந்த பேராசிரியர் எஸ்.ஸ்ரீகாந்தன் காலமானார்.
பேராசிரியர் எஸ்.ஸ்ரீகாந்தன் சுகவீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று -14- காலை உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் திங்கட்கிழமை 16 ஆம் திகதி மாலை 4 மணிவரை கல்கிஸை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதேவேளை கொழும்பு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா கற்கைநெறியின் தமிழ் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்து. ஸ்ரீகாந்தன் ஆற்pய சேவைகளை நிணைவு படுத்தியுள்ள முஸ்லிம் மீடியா போரம்அவரின் மறைவுக்கு அனுதாபமும் தெரிவித்துள்ளது.
Post a Comment