Miss Call அபாயம் - 14 வயது சிறுமியை தாயாக்கிவிட்டு தப்பிக்கமுனைந்த இளைஞன் கைது
14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி அவரை தாயாக்கி விட்டு தப்பிக்க முனைந்த 25 வயதான இளைஞர் ஒருவரை கல்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் ஒரு குழந்தையை பெறுவதற்கு தயாரான நிலைக்கு வரும் போது அந்த இளைஞன் அவரை கைவிட்டு செல்ல முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கல்பிட்டிய பகுதியில் வசிப்பவர் எனவும் கொச்சிக்கடை - வெளிஹேன பிரதேசத்தில் மறைந்திருக்கும் போதே கைதாகியுள்ளார்
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தற்செயலாக கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைய சந்தேகநபர் குறித்த 14 வயது சிறுமியுடன் அறிமுகமாகியுள்ளார்.
அதன் பின்னர் அவர்கள் பெற்றோருக்கும் தெரியாமல் ரகசிய உறவை பேணி வந்துள்ளனர்.
பின்னர் குறித்த சிறுமி கர்ப்பமடைந்திருப்பதை அறிந்த இளைஞன் சிறுமியை கைவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் இளம் வயது பெண்ணொருவர் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் அறிந்த பொலிஸார் அது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
Post a Comment