ரோஹின்யர்களுக்கு எதிரான அத்துமீறலின்போது, பொலிஸார் கடமை தவறினார்களா? விசாரணை ஆரம்பம்
மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்குதல்களின் போது பொலிஸார் அவற்றை தடுக்காமல் கடமை தவறி செயற்பட்டனரா என்பதை கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவு (எஸ்.ஐ.யூ.) இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். நேற்று வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி கல்கிஸை பகுதியில் இடம்பெற்ற இந்த அத்துமீறல்களின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் திருப்தியானதாக இல்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்ட பல தரப்பினரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந் நிலையில் கல்கிஸை பொலிஸார் இதன்போது கடமை தவறினரா என்பது குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மெவன் சில்வா தலைமையிலான குழுவினர் விசா ரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
POLICE & POLITICAL DRAMA !. Nothing going to happen.
ReplyDelete