Header Ads



இந்த பௌத்த பிக்குவை கண்டால், உடனடியாக அறிவிக்கவும்

கல்கிஸ்ஸை பகுதியில் ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக மோசமான முறையில் நடந்துகொண்ட தேரர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபரான அரம்பெபொல ரத்னசார தேரர் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்ததால் உடன் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 071-8591727 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கோ தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் சாணக குணாதிலக என்ற நபரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்திருப்பின் குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ, அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ தகவல் வழங்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

4 comments:

  1. இவன் T SHIRT கட்ட கலிசன்போட்டுக் கொண்டு சுத்துவான் சீரயோடு வந்தால் பிடிக்கலாம்

    ReplyDelete
  2. Koli thinda kallan kooda ninru ulathum pothu eppadiya pidipaduwan?

    ReplyDelete

Powered by Blogger.