Header Ads



ரவி கருணாநயக்காவினால் நியமிக்கப்பட்ட, லிற்றோகேஸ் தலைவருக்கு இலங்கை குடியுரிமை இல்லையாம்

தாய்வான் நாட்டு வங்கியொன்றில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க இலங்கை பிரஜை அல்ல என இரகசிய பொலிஸார் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவுக்கு இன்று(11) அறிவித்துள்ளனர்.

இவர் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் எனவும், அவருக்கு இலங்கையில் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்டுள்ள விசா கால எல்லை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாகவும் இரகசிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.