வடக்கு - கிழக்கு இணைப்பில், மெத்தனப் போக்கு அவசியம் - ஹக்கீம்
-வீரகேசரி பத்திரிகை-
வடகிழக்கு மாகாணங்கள் இணையும்போது முஸ்லிம்களுக்கு தனியலகு உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகால கொள்கை ரீதியான தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்துமில்லை. இந்த விடயத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடிவெடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வடகிழக்கு மாகாணங்கள் இணையும்போது முஸ்லிம்களுக்கு தனியலகு உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகால கொள்கை ரீதியான தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்துமில்லை. இந்த விடயத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடிவெடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வடக்குடன் கிழக்கை இணைக்கவிட மாட்டோமென கூறி சிக்கலை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு தூபமிடுவதற்கு முடியாது. நீண்ட கலந்துரையாடல்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். அது தொடர்பில் கலந்துரையாட முஸ்லிம் சகோதர்களுக்கு அழைப்பு விடுகின்றோம். அதேவேளையில் இணைந்த வடக்கு கிழக்கிற்கு படித்த பக்குவமான முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக்குவதை எதிர்க்கப்போவதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மன்னாரில் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர்களுள் ஒருவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான ஏ.எச்.எம்.ஹரீஸ், வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான கருத்துக்களை வௌியிட்டிருந்தார். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் சுதந்திரக்கட்சி, மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாடு நம்பிக்கையான ஒளிக்கீற்கு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துக்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது நீண்டகாலமாக பேசப்படுகின்ற விடயமாகும். இது இரண்டு சமூகங்களின் அபிலாஷைகளுடன் தொடர்புடைய விடயமாகும். இந்த விடயத்தில் எமது கட்சி நீண்டகாலமாக ஒரு நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக எமது மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுகின்ற போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு தனியானதொரு அலகு அமையவேண்டும் என்று கொள்கையளவிலான முடிவொன்றை எடுத்திருந்தார்.
இந்த தீர்மானத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது வரையில் விலகவில்லை. இவ்விடயம் சம்பந்தமாக நாம் தமிழ் சகோதர்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். நடத்திக்கொண்டும் இருக்கின்றோம். மேலும் நிபந்தனைகளுடனான நீண்ட கலந்துரையாடல்களும் அவசியமாகின்றன.
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் ஒரு வகை மெத்தனப் போக்கையே கடைபிடிக்க வேண்டியுள்ளது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதிலளித்து விடமுடியாது. இதற்கு காரணங்கள் உள்ளன. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பில் 13ஆவர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாகாண சபை முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஒருவருடத்திற்குள் கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நீடிப்பதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதன் ஊடாக இரண்டு சகோதர சமுகங்களுக்கு இடையில் விபரீதம் ஏற்படுத்த அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் முயன்றது. ஆனால் அத்தகைய நிலைமைகள் எல்லாம் தெய்வாதீனமாக கடந்து போயின.
தற்போதைய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுகின்ற போது முஸ்லிம்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் தனி அலகு அமையப்பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்காக நீண்ட பேச்சுவார்த்தைகள், நிபந்தனையுடனான முன்னெடுப்புகள், விட்டுக் கொடுப்புகள் என பல விடயங்கள் இடம்பெறவேண்டியுள்ளன.
வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது. அது ஆரோக்கியமானதல்ல. சிக்கலை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு இவ்வாறு ஒரே நிரையில் பதிலளிப்பது அவர்களின் நிகழ்ச்சிக்கு தூபமிடுவதாகவே அமையும்.தமிழ் முஸ்லிம் மக்களிடையில் எந்தவிதமான நல்லுறவும் பேணப்படக் கூடாது என்ற போக்கையே இத்தகையோர் கொண்டுள்ளனர். இது பிழையான அணுகுமுறையாகும்.
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தினூடாகவே அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க இரு மாகாணங்களும் அங்கீகாரம் வழங்கினாலும் அது சாத்தியமாகாது. இவ்வாறான சில காப்பீடுகளும் இருக்கும் நிலையிலே இந்த விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்துது போல காட்டி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவசரப்பட்டு பேசுவது அரசியல் பிழைப்புவாத பேச்சுக்கள் மட்டுமேயாகும். ஒரே இரவில் அல்லது நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்துவிடுவதைப்போன்று பேசுகின்றனர். முஸ்லிங்களின் உடன்பாடின்றி இதனை செய்ய முடியாது. செய்யவும் மாட்டோம் என சம்பந்தனே கூறியிருக்கிறார். வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்க்க வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு அடுத்தபடியாகவே இவ்விடயம் தொடர்பில் ஆராய முடியும்.
ஹக்கீம் அவர்கள் முஸ்லீம் சமூகத்துக்கு இதுவரை எதனையும் சாதிக்காமல் விட்டுக்கொடுப்பை மட்டுமே பேசி வருகின்றார் .தமிழ் தங்கள் காணி விடயத்தில் எவ்வளோ சாதித்து விட்டார்கள் .ஆனால் ஹக்கீம் அவர்கள் முஸ்லீம் சமூகத்தின் காணிகளை விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றார் .இறுதியாக வடக்கையும் கிழக்கையும் இணைத்து முஸ்லீம் சமூகத்தின் அணைத்து உரிமைகளையும் விட்டுக்கொடுக்கும் வரை இவருடைய முயட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் .இதனால் எமது முஸ்லீம் சமூகம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் .
ReplyDeleteஹக்கிம் ஐயா.தூரநோக்கு கொண்ட தலைவர் அவரின் நிலைப்பாடு முஸ்லீம்களுக்கு நன்மையே.
ReplyDeleteவடகிழக்கு மாகாணங்கள் இணையும்போது முஸ்லிம்களுக்கு தனயலகு உருவாக்கப்பட வேண்டும். இது மிஸ்டர் ஹகீம் அவர்களின் கூற்று. ஹகீம் அவர்களை இதற்கான திட்டத்தை உங்களால் காட்ட முடியுமா. எவ்வாறு அலகுகள் பிரிக்கப்பட வேண்டும் எல்லைகள் எப்படி...இந்த விடயத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத்தான் முடிவு எடுக்க வேண்டும். வடகிழக்கு பிரச்சினையில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையோ அல்லது அருகதையோ இல்லை. நீங்கள் என்ன கிழக்கில் பிறந்தீர்களா அல்லது வடக்கில் வளரந்தீர்களா. வடகிழக்கு மக்களுக்கு அல்லவா தெரியும் தமிழன் அடித்த அடியும், பட்ட கஷ்டமும், இழப்புகளும். இத்தனை வருடம் கடந்தும் வடக்கு அகதிகள் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பை கதைக்க கிழம்பி விட்டார். ஏன் ரோஹிங்கியர்களைப் போல் கிழக்கு மக்களையும் பார்ப்பதற்கு மிகவும் ஆசை போலும். இணைப்பைப் விடயமாக நீண்ட கலந்துரையாடல்கள் நடப்பதற்கும், விட்டுக் கொடுப்பதரற்கும் இது என்ன குடும்ப பிரச்சினையா. இன்னுமா உட்கார்ந்து தமிழர்களுடன் பேச சொல்கின்றீர்கள். இன்னும் எதைக் கொடுக்கச் சொல்கின்றீர்கள். பொண்டாட்டி பிள்ளைகளைத்தான் கொடுக்க வேண்டும். உங்கள் கட்சியும், நீங்களும் முஸ்லிம் சமூகத்தையே காட்டிக் கொடுத்து, முஸ்லிம்களின் வாக்குகளை பிச்சை எடுத்து இன்று சுகம் அனுபவிக்கின்றீர்கள். சம்பந்தன் ஐயா அவர்களை உங்களின் "படித்த பக்குவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை எதிர்க்கப்போவதில்லை" என்ற கருத்து 2017 ஆம் ஆண்டின் சிறந்த ஜோக்காக கருதலாம். ஐயா அவர்களே, இப்படி நீங்கள் கூறியது போன்று ஒரு பிரதேச சபை உருப்பினர் கூட இல்லாததால் தான முஸ்லிம் சமூகம் இன்று இப்படி தத்தளிக்கின்றது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அயோக்கியன்கள் தானே முஸ்லிம் சமூகத்தை ஆட்சி செய்கின்றார்கள். ஐயா அவர்களே வடகிழக்கை இணைக்காமல் இவ்வாறு பிரிந்து இருப்பதால் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்ன பிரச்சினை என்று கூற முடியுமா. ஐயா அவர்களே, உங்களையோ தமிழ்த்தலைவர்களையோ ஒரு போதும் நம்ப முடியாது. அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. முஸ்லிம்களுக்கு தமிழர்கள் செய்த அநியாயங்களின் காயத்தின் வடுக்கள் இன்னும் ஆறவி்ல்லை. எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தது போன்று வடகிழக்கு இணைப்பையும் வடகிழக்கு முஸ்லிம்கள் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் என நினைக்காதீர்கள். ஐயாவினகதும், தமிழ்த்தலைவர்களினதும் தற்போதைய நோக்கம் வட கிழக்கு இணைப்பு, சில ஆண்டுகளின் பின் ஈழம். ஈழத்தினதம், இலங்கையினதும் எல்லையில் ரோஹிங்கியர்கள் போன்று வடகிழக்கு முஸ்லிம்கள். மிகவும் அழகான, நிதானமான திட்டம். இந்த நிலைமைக்கு இட்டுச் செல்லும் வடகிழக்கு இணைப்பை ஆதரிக்கும் அளவிற்கா மடையர்கள் வடகிழக்கு முஸ்லிம்கள். ஹகீம் அவர்களே இணைப்பு விடயமாக நீண்ட காலம் பேசப்பட்டால் என்ன குறிகிய காலம் பேசப்பட்டால் என்ன அல்லது உங்களின் கட்சி நீண்ட கால நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் எங்களுக்கு என்ன. அனைத்தையும் உங்களின் இனவாதக் கட்சியோடு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்சியின் கருத்து வடகிழக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடும் அல்ல நீங்கள் எங்கள் பிரதிநிதிகளும் அல்ல. வாக்கும் பிச்சையில் வாழும் அயோக்கியன்களே. அஷ்ரப் அவர்களின் கருத்தும் நிலைப்பாடும் அவரின் மரனத்தோடு போய் விட்டது. அவரின் நிலைப்பாட்டை முஸ்லிம்களுக்கு சொல்வதற்கு, நீங்களும், உங்கள் கட்சியும் அஷ்ரபின் கொள்கைகளை தவறாமலா பின்பற்றுகின்றீர்கள். ஒட்டு மொத்தமாக இந்த செய்தியில் உள்ள உங்களின் கருத்தும், கதைகளும் மடையனுக்கும், முட்டாளுக்கும், பைத்தியகாரனுக்கும், கடந்த மாதம் பிறந்த குழந்தைக்கும் சொல்வது போல் உள்ளது. உங்களின் இந்தக் கருத்துக்கழையும், இந்த செய்தியையும் பார்த்துக் கொண்டிருக்க வடகிழக்கு முஸ்லிம்கள் ஒன்று அயோக்கியன்களும் அல்ல முட்டாள்களும் அல்ல. வடகிழக்கு இணைப்பு என்பது எத்தனை மகா பெரிய விடயம். வடகிழக்கு மண்ணில் வாழவிருக்கும் எமது சந்ததிகள் உலக அழிவு வரை சந்திக்கப்போகும் மிகப்பெரிய விடயம். எத்தனை விவாதங்களும், கருத்துக்களும் இடம்பெற வேண்டிய விடயம். இவர் ஏதோ அவர் வீட்டு குசினிப் பிரச்சினை போன்று பேசிவிட்டும் போகின்றார். தனி அலகு..தனி அலகு என்றுதான் கூறுகின்றாரே தவிர அதன் நிபந்தனைகள் எவ்வாறு இருக்கும், சிறுபான்மையாக குக்கிராமங்களில் வாழுபவர்களின் நிலைமை என்ன, முஸ்லிம் சமூகம் இதனால் என்ன நன்மைகளைப் பெறும், இந்த இணைப்பானது தனிநாட்டிற்கு வழிவகுக்காதா என எத்தனை விடயங்களை இவரும் இவரின் கட்சியும் முன்வைக்க வேண்டி உள்ளது. இதை எல்லாம் விட்டு விட்டு தனி அலகு தனி அலகு என சிறு பிள்ளைத்தனமாக கத்திக்கொண்டிருக்கின்றார். ஷைத்தானைக் கூட நம்பலாம் ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்புவதை விட ஷொப்பிங் பேக்கை கட்டிக் கொண்டு கடலிலே குதிக்கலாம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteதனியலகு என்றால் காத்தான் குடி மூதூர் தோப்பூர் கல்மூனை குடி. சாய்ந்தமருது சம்பான்துறை பொத்துவில்தெற்க்கு ,ஏறாவூர் அட்டாளைச்சேனை .தோப்பூர்.புல்மேட்டை.மருதமுனை.இக்காமம்.தம்பலகாமம் தெற்க்கு. கிண்ணியா. இவைதானே வேறு என்ன.??
DeleteFoolish Hakeem
ReplyDeleteSUPER REPLY "IRANDAM KURUKKU THERU!!
ReplyDeleteyou have very clearly told that i wanted to say!!!
RAUF HAKEEM IS THE REAL ENEMY OF SRI LANKAN, PARTICULARLY NORTH & EAST MUSLIMS! HE IS NO.1. HYPOCRISY!! BIG CHEATER! DAYTIME ROBBER!!
He cannot be trusted to handle SL. Muslim affairs, Based on the past and what he has been doing since came to the seen of SLMC.
ReplyDelete